ஒருநாள் கார்
முகில்
வந்து
மூடும்
ஆதவன் நம் கண்ணுக்கு
தெரியாமல்
போவான்
ஆனால் ஆதவன் என்றும்
அழிவதில்லை
மறுநாள் இடியோடு
மழையும்
கொட்டும்
ஆதவன் நம் கண்ணுக்கு
தெரியாமல்
போவான்
ஆனால் ஆதவன் என்றும்
அழிவதில்லை
மீண்டும் பனி
மூட்டம்
வந்து
மூடும்
ஆதவன் மீண்டும் கண்ணுக்கு
தெரியாமல்
போவான்
ஆனால் ஆதவன் என்றும்
அழிவதில்லை
இது போலே நம்
அறிவை
மூடி
நிற்க்கும்
ஆணவம் கன்மம் மாயை
என்னும்
மூன்றும்
நம்மை
விட்டு விலகும் போது
ஆண்டவன்
நம்
அறிவு
கண்ணுக்கு
தெரிவான் என்கிறது
இந்து
மதம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen