Samstag, 24. November 2012


குரங்கின் கையில் பூமாலை

குரங்கின் கையில் பூமாலை

கயவன் கையில் கன்னி பெண்

விதியின்   சூழ்சியில் அகப்பட்டு

காமுகன் கண்ணில் தென்பட்டு

காதல் வலையில் சிக்குண்டு

கலைந்து போகும் மேகம் போல்

சிதறி போகும் வாழ்கையிலே

அலை கடலில் துரும்பாக

அலைவதுதானே பெண் மனசு

சிறகு ஒடிந்த பறவை போல்

தள்ளாடும் நிலையோடு

வெறும் பாலை வனத்தினிலும்

சோலை ஒன்று வருமா என்று

தினம் கனவு காணும் காலம்

பெண்மை கனவு காணும் காலம்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen