Donnerstag, 5. Oktober 2023

 

கலப்படம் 

எங்கே பார்த்தாலும் எதிலும் கலப்படம்  கலப்படம் இல்லாத சுத்தமான பொருட்கள் எதுவுமே இல்லை என்றாகி விட்டது உலகிலே, பாலுக்கு நீரை விட்டு கலக்குறாங்கள் அரிசியிலை கல்லை கலக்குறாங்கள்  மாடுகளுக்கு குடுக்கிற தவிட்டிலை கூட உமியை கலக்குறாங்கள்  அதுவும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிற அனைத்து பொருட்களும் இப்ப கலப்பட பொருளாகவே வருகிறது

சுத்தமான மிளகாய் தூளும் இல்லை சுத்தமான அரிசிமா சவ்வரிசு கூட இல்லை எல்லா உணவு பொருட்களுக்குள்ளும் ஏதோ கலந்து சுவை குறைந்து மணம் குறைந்து தரமில்லாத  பொருட்களாக ஆரோக்கியமற்ற உணவு பொருட்களாகதான் எல்லாம் காணப்படுகிறது இருந்தும் நாமும் தேடி தேடி அலைந்து அவைகளையே வாங்குகிறோம் காரணம் நம்ம நாட்டு உணவுகளை சமைத்து சாப்பிட வேணும் என்ற பேராவலில் பாருங்க!

கலப்படம் இல்லாத தங்கமும் இல்லை கலப்படமில்லாத தமிழனும் இப்ப இல்லை பாருங்க! புலம் பெயர்ந்து  திக்கு திக்காய் போன தமிர்கள் வாழ்வில் பாசையிலும்  கலப்படம் வந்து விட்டது, சுத்தமான தமிழை பேசுவதுமில்லை எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டு மொழியும் கலந்துதான் பேசுகிறார்கள் இது மட்டுமா? அவர்களது மதம் கலாச்சாரம் அதுவும் கலந்து கலப்படமாக மாறியது மட்டுமின்றி அவர்களது சிறார்கள்  மதம் மொழி  கலாசாரம் எதுவுமில்லாத ஒரு கலப்பட பிள்ளைகளாக வளர்வதும் உண்மை!

அதைவிட பெரிய மறுக்கமுடியாத உண்மை எதுவெனில்  வெளிநாட்டில் வாழும் தமிழ் பிள்ளைகள் அன்னிய மொழி பேசும் பிள்ளைகளையே விரும்பி மணமுடிபதாகும் ஒவ்வnரு புலம் பெயர் தமிழர் வீட்டிலும் ஒரு பிள்ளையாச்சும் தமிழ் பிள்ளை இல்லாத, வாழுகின்ற நாட்டு பிள்ளையை அல்லது அவர்கள் வாழுகின்ற இடத்தில் வாழும் வேறு நாட்டவர்களை காதலித்து மணமுடிப்பது இங்கு இயல்பாகி போய் விட்டது

அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள்தான் பெரிய கலப்படம் வெள்ளை கருப்பு இங்கே கலக்கின்றது, மொழியும் மதமும் இங்கே கலக்கின்றது  இரு நாடுகள் இங்கே இணைகின்றது

இங்கு தமிழ் பிள்ளைகள் யேர்மன் நாட்டவரை மட்டுமின்றி   மற்ற நாட்டு பிள்ளைகளையும் மணமுடித்துள்ளார்கள் இதற்கு மேலாக ஒரு கலப்படம் இருக்குமா உலகிலே?

இதை விட கலப்படத்தை பற்றி நான் என்னதான் சொல்ல முடியும்?

கவி  மீனா