Mittwoch, 25. September 2019


அண்டமும் அவனே
முல்லை தீவில் சைவ கோயில் வளாகத்தில்  புத்த பிக்குவை தகனம் செய்ததால் இந்து மதத்தக்கு இழிவு ஏற்படுத்தியதாகவோ அல்லது அங்கு எரிக்கபட்ட பிக்குவுக்கு முத்தி கிடைக்க போறதாகவோ பிக்குகள் நினைத்தால் அது
ஒன்றும் நடக்க போவதில்லை  இதனால் உண்மையில் எந்த இழிவும் இந்து மதத்துக்கு உண்டாக போவதுமில்லை!
காரணம் அண்ட சாகரங்களையும் படைத்த இறைவனுக்கு சுடுடகாடும் ஒன்றே! கோயில்களும் ஒன்றே! யாதும் அவனதே!

சுடுகாட்டில் நடனமாடும் சிவனுக்கு சுடுகாட்டு சாம்பலை எடுத்து மேலில் பூசும் சிவனுக்கு இது எப்படி கேடு விளைவிக்கும்?
இந்து மதத்தின் முழுமுதல் கடவளான சிவனுக்கு பிடித்த இடமே சுடுகாடுதான் என்று இந்து மத புராணங்கள் கூறுகின்றன.
அதை அறியாத மூட பிக்குகள் தாம் ஏதோ இந்து மதத்தை இழிவு படுத்துவதாகவும் இடத்தை கைபற்றியதாகவும் எண்ணினால் அது அவர்களது அறியாமையே!

புத்தர் ஒன்றும் கடவுள் இல்லை, அவர் ஒரு சாதாரண அரச குடும்பத்தில் பிறந்து குடும்ப வாழ்கையிலும் ஈடுபட்டு
ஒரு கட்டத்தில் ஆடம்பர வாழ்க்கையில் மனம் வெறுத்து  துறவறம் பூண்டு, அரச வாழ்வை விட்டு வெளியேறிய போது நாடு நாடாக அலைந்து ஒரு அரச மரத்தின் கீழ் இருந்த போது அவர் ஞானம் பெற்றதாகவும், மற்றவர்களுக்கும் அதை எடுத்து சொல்லி நல்லது செய்யும் படி, பாவம் செய்ய வேணாம், ஏழைகளுக்கு உதவுங்கள் என்று அவர் எடுத்து சொன்ன விடயங்களை கூட இந்த பிக்குகளுக்கு விழங்கவில்லை, அதை கடைபிடிபதும் இல்லை.

புத்தர் ஒரு மகான் அவர் கடவுள் இல்லை அவருக்கு அருள் குடுத்ததே நமது இந்து கடவுளாக இருக்கலாம், காரணம் அரச மரம் இந்துக்களுக்கும் ஒரு முக்கியமான விஸேமான மரமாகிறது.
எல்லா சைவ கோயில்களிலும் அரச மரம் காண படுகிறது அதனால் புத்தர் எடுத்து சொன்ன கடவுளும்  இந்து கடவுளாக இருக்கலாம்,
காரணம் ஆதியும் அந்தமும் இல்லா இறைவன், ஆதி தொட்டு இந்த பூவலக மக்களால் வழங்கபட்ட மதம் இந்து மதம் ஒன்றே!
கண்ணுக்கு தெரியாமல் எங்கும் வியாபித்திருக்கும் இறை அருளை பற்றி சொன்னாலும் பிக்குகளுக்கும் விழங்காது, அறியாமை இருள்  மண்டி கிடக்கும் மனிதர்களுக்கும் விழங்காது.
பிள்ளையார் கோயில் வழாகத்தில் எரித்து விட்டால் எரிந்த  பிக்கு பிள்ளையார் ஆகுமா?  இல்லை இத்து மதத்தை இழிவு படுத்த முடியுமா?
கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை அங்கும் கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்த்துவுக்கு பின் என்று  காலத்தை பிரிக்கிறார்கள் அப்படியானால் கிறிஸ்துவுக்கு முன் இருந்த மதம் எந்த மதம்? இதற்கு விடை கூற கிறிஸ்தவர்களாலும் முடியவில்லை!
அதனால் எல்லா மாதத்தக்கும் மூலமாய், முன்னமாய் இருந்த ஒரே மதம் இந்து மதம் மட்டுமே என்பதே எனது கருத்து, இதுவே ஆணி தரமான கருத்தாகும்.
அந்த முழுமுதல் கடவுளான சிவனுக்கே பிடித்த அலங்காரம் சுடுகாட்டில் எரிந்த பிணங்களின் சாம்பல் தானே!

அண்டமும் அவனே பிண்டமும் அவனே
ஆதியும் அந்தமும் இல்லா சிவனே.