Dienstag, 26. März 2013


துளசி செடி

 
பாலனாய் ஏழு உலகு உண்டு பரிவின்றி

ஆல் இலை அன்ன வசம் செய்யும் அண்ணலார்

தாள் இணை மேல் அணி தன் அம் துழாய் என்றே

மாலுமால் வல்வினையேன் மடவல்லியே 

( நம் ஆழ்வார் திரு மொழி )

 

துளசி செடி கோவில்களில் பூசைக்கு உபயோக படுவதுடன் தீத்த நீரிலும்  கலந்து பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுக்க படுகிறது  அந்த துளசி ஊறிய நீரை நாம் தினமும் குடித்து வந்தாலே எமது வியாதிகள் யாவும் நீங்கி வீடும் என்பது அயுர் வேத மருத்துவ கூற்றாகும் காரணம் துளசி மூலிகை இனத்தை சேர்ந்த ஒரு மருதுவ செடியாகும்

துளசி செடியை வீட்டு தோட்டதிலோ வீட்டு மாடங்களிலோ வளர்பதாலே சுற்றாடலில் காற்று சுத்தமாக்க படுவதுடன் கொசுவின் தொல்லை குறைந்துவிடும் துளசி செடி ஒக்சிசனை மட்டும் இன்றி ஓசோன் எனப்படும் வாயுவையும் சேர்து விடுவதால் நமது சூழலை சுத்திகரித்து நச்சு வாயுகளை அழிகின்ற தன்மை வாய்ந்தது

துளசி பல மருத்துவ குணம் கொண்ட செடியாகும் தினமும் துளசி இலை ஊறவைத்த நீரை பருகி வர நீரிழிவு நோய் குறையும் என்று சொல்ல படுகிறது  ஜீரண சக்தியை அதிகரிக்கவும் வாய் துர் நாற்றத்தை போக்கவும் மேலும் சளி  மன அழுத்தம் நரம்பு தளர்ச்சி நோய்களை குறைக்க வல்லது தேனும் துளசி சாறும் கலந்து சாப்பிட்டால் சளி விட்டு போகும் என்பது ஆயுர் வேத மருத்துவம் கூறுகிறது

துளசி செடியில் பல வகை உண்டு வெண்துளசி கரும்துளசி காட்டுதுளசி இப்படி பல வகை உண்டு ஒவ்வொரு துளசிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருதவ குணங்கள் உண்டு கரும்துளசி இலையை அரைத்து தலைக்கு பூசி ஊறவிட்டு கழுவி வர பொடுகு பேன் எல்லாம் அற்று போகுமாம்

இதை விட துளசி ஆன்மீக தன்மை கொண்டதாக கருத படுகிறது இந்து மதத்திலே துளசி இலை நுனியிலே பிரம்மாவும் நடுவிலே விஸ்னுவும் அடியில் சிவனும் மற்றைய பகுதிகளிலே இரு அசுவினி தேவர்களும் எட்டு வசுகளும் பதினொரு ருத்திரர்களும் பன்னிரண்டு ஆதித்தியர்களும் எழுந்தருளி இருப்பதாக சொல்ல படுகிறது அப்படி மகிமை வாய்ந்த துளசி காட்டுக்குளே போய் வந்தாலே பிரமகஸ்தி தோசமே நீங்குவதாக நம்பபடுகிறது  துளசி செடியை வளர்து பேணி வருவோருக்கு மனம் காயம் வாக்கு சுத்த படுகிறது அத்துடன் தீய சக்தி அவ் வீட்டை அணுகாமல் துளசி செடி  காக்கிறது என்பது இந்துகளின் நம்பிக்கை

 

இப்படி எல்லாம் மகிமை வாய்ந்த துளசி செடி தமிழருக்கும் இந்து மதத்துக்கும் கடவுள் நம்பிக்கையோடு மருதுவத்தை தந்த துளசி செடி மேலை நாடுகளில் பசிலிக்கும் (Basilikum)   என்னும் வேறு பெயரில்  உணவுகளுக்கு மணம் சுவை ஊட்டும் தாவரமாக பயன் படுத்த படுகிறது இத்தாலியர் ஜேர்மனியர்கள் அசைவ சைவ உணவு எதுவானாலும் பசிலிக்கும் போடாமல் சமைப்பதில்லை அவர்களும் இந்த செடியை மருதுவ குணமும் வாசமும் உள்ளதாக கருதுகிறார்கள் ஆனால் எமது நோக்கில் பாக்கும் போது

மாடத்தில் வைத்து பூசைக்கு உபயோகிக்கும் நம்ம துளசி இலை இறைச்சி மீன் உணவோடு சேர்ந்து அவிவதை பார்க கவலையாக உள்ளது இடங்கள் மாறும் போது  தாவரங்களுக்கும் அதன் மதிப்பு கெட்டு போகிறது

கவி மீனா

 



அன்னை

ஒரு தாயின் அன்பை தனயன் மறந்தால்

தரணி வாழ்வும் தவறியே போகும்

கருவில் சுமக்கும் போதும்

தொப்புள் கொடியால் உயிரை காத்தாள்

மடியில் சுமந்த போதும்

முலையின் அமுதம் தந்தே அணைத்தாள்

கையில் சுமக்கும் போதும்

நிலாவை காட்டி சோறும் ஊட்டினாள்

காலம் உருண்டு போன போதும் உன்னை

மனதில் சுமந்தே கடமைகள் செய்தாள்

இறுதிகாலம் வரையும் உன் நினைவில்

அன்னை மகிழ்ந்தே மடிவாள்

அன்னைதானே பெண்ணின் பெருமை

படைபின் மூலம் அவளே கடவுளின் மறு வடிவம்

கவி மீனா
 

Mittwoch, 13. März 2013


பெண்கள்

பிரமன் எழுதிய அடிமை சாஸனம் பெண்களுக்கு இன்று அழிந்து போய்விட்டது பொதுவாக ஆனால் வறுமை நிலவும் நாடுகளில்  வீட்டில் இன்னும் பெண்கள் தலை தூக்க முடியாமல்தான் இருக்கிறார்கள்

அடுப்பங்கரை பூனைகளாய் ஆண்களின் ஆசைக்கு காமகிளதிகளாய் மட்டுமே வாழ்ந்த பெண்ணினம் இன்று விஞ்ஞானம் கற்று விண்ணுலகம் போய் வந்து விமானத்தில் பறந்து வித்தைகள் பல கற்று எத்திசையிலும்  எத்துறையிலும் முன்னோடிகளாய்  முன்னேறி நிற்கும் நவநாகரிக யுவதிகளாய் வாழ்கின்ற போதிலும் அவர்கள் மனங்களிலே  இன்னும் வேதனைகள் ஆண்களின் அவமதிப்புகளால் உண்டாகும் காயங்கள் தீபிழம்பாக நீறு பூத்த நெருப்பாக நெஞ்சுக்கள்ளே குமுறி கொண்டுதான் இன்னமும் இருக்கிறது

என்னதான் பெண்கள் சாதித்தாலும் ஒரு தந்தை அவளை பெருமை படுத்துவார் தன் மகள் சன்றோர் என்று தானும் பெருமை கொள்ளுவார் ஆனால் அதே ஒரு கணவனால் அந்த பெண்ணினின் பெருமையை திறமையை முழுமனதாக ரசிக்க முடிவதில்லை புகழ்ச்சியை கண்டு பொறாமைதான் கொள்கிறான் காரணம் அவனால் பெண்ணை தனக்கும் மேலாக பார்க்க மனசு இடம் கொடுப்பதில்லை என்பதே காரணம் படைபின் வடிவே பெண்தான்  கடவுளின் சக் தியும் பெண்தான்  இதை ஒவ்வொரு ஆணும் உணர்ந்தால் மட்டுமே பெண்களுக்கு உண்டு விடிவு

பெண் விடுதலை பற்றி நாம் பேசி கொண்டே போகிறோம் என்றைக்கும் அதற்க்கு முடிவே இல்லை

பூனைகளிடம் இருந்து எலிகளுக்கு சுதந்திரம் கிடைகாது என்று பெரியார் சொன்ன கூற்று சரியாகவே உள்ளது  விவாகரத்துகள் இன்று உலகில் பெருகி கொண்டே போகிறது காரணம் ஆண் பெண் ஒற்றுமை இன்மை பெண்ணை மதிக்க தெரிந்த்தால் குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும் குடும்பதில் அடிமைதனம் தலை தூக்கும் போதுதான் குடும்பங்கள் சிதறுகின்றன

இதைவிட இன்று வரை ஒரு பெண்தனியாக நடமாட முடியாமல்தானே இருக்கிறது  எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு நடக்கிறது  காமம் தலை தூக்கி ஆடும் உலகில் பெண்கள் சுதந்திரமாக தனியாக நடமாட முடியாமல் போவதுதான் உண்மை அதுகும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்

இதைவிட கொடுமை என்னவெனில் பெண்ணுக்கு பெண்தான் முதல் எதிரி ஆகிறாள்  மருமகளுக்கு ஒரு மாமி சரியா வாய்க்காவிடில் அவளது குடும்ப வாழ்கை நாசமாக போகிறது காரணம் கணவனுக்கு அவனது அம்மாதான் பெண்ணாகவும் நியாயமானவளாகவும் தெரிவதால் தன் மனைவியும் ஒரு பெண் தனது பிள்ளைகளின் தாய் என்பதை அந்த கணவன் உணரும் வரை பெண்ணுக்கு இல்லை நின்மதி அந்த குடும்பத்தில்

மேலும் கணவனின் கொடுமை தாங்க முடியாது ஒரு பெண் பிரிந்து சென்று தனியாக வாழ முயன்றால் மற்ற பெண்களுக்கு அது பிடிகாது காரணம் தாங்கள் அடியும் உதையும் ஏச்சும் பேச்சும் வாங்கி கொண்டு குடும்பதில் கிடந்து நரக வாழ்கையை வாழும் போதும் தாம் நல்லாக வாழ்வதாக வெளியில் நடித்து கொண்டு இருக்கும் பெண்கள்தான் இன்றும் அதிகம் இப்படி பட்ட பெண்களுக்கு ஒரு பெண் துணிந்து தனது விடுதலைகாக பாடு பட்டு தனித்து வாழ்ந்தால் அவளை குணம் கெட்டவளாகவும் தரம் கெட்டவளாகவும் பேசி இன்புறவது ஆற்றாண்மையில் தவிக்கும்  சில தமிழ் பெண்களின் குணமாகும்

இதனால்தான் சொல்கிறேன் பெண்ணுக்கு முதல் எதரி பெண்களே பெண்கள் வாழ்கையில் முன்னேற்றம் அடைய எப்படி ஒரு கல்வியும்  பிற மொழி அறிவும் ஒழுகமும் தேவையோ அது போலே ஒவ்வொரு ஆணும் பெண்ணை மதிக்க கற்று கொள்ள வேணும் அத்தோடு பெண்கள் சக பெண்களுடன் பொறாமை படாது ஒற்றுமையாக கஸ்டம் வரும்கால் கை கொடுத்து உதவி செய்கிற மனபாங்குடன் வாழ வேணும்

இந்த மனபாங்கு  வெளிநாட்டில் பெண்களிடம் இருபதால்தான் வெளிநாட்டு பெண்கள் நின்மதியாக வாழுகிறார்கள் ஒருதருக்கு ஒருதர் கஸ்டம் வரும் போது உதவி செய்வதுடன் அதற்கான அமைபுகளும் இங்கு காண படுகிறது

ஆனால் தமிழ் பெண்கள் ஒரு பெண்ணுக்கு கஸ்டம் வந்தால் அவளை பற்றி அவதூறு பேசி பொழுதை போக்குவதுடன் அந்த பெண்ணை மேலும் வெந்த புண்ணில் வேலை பாய்சுவது போலேதான் நடாத்துகிறார்கள்  விழுந்தவனை தூக்கி விட கைகள் இல்லை இங்கே எறி மிதிக்க கால்கள்தான் ஓடி வரும்

எனவே பெண்களே முதல் மனம் திருந்த வேணும் பெண்களுக்கு உதவி செய்ய முன் வரவேணும் இதற்கான அமைபுக்கள் உருவாக வேணும் சும்மா வாயால் பேசி பேசி ஆவது ஒன்றும் இல்லை செயலால் பெண்கள் முன்னேற வேணும் அன்னை திரேசா போலே பெண்கள் மாறாவிடிலும் எம்மால் இயன்றளவு பாதிக்கப்ட்ட பெண்களுக்கு உதவி செய்ய முதல் பெண்கள் முன்வர வேணும்

பொறாமை எரிசல் பேராசை காமம் கோபம் போன்ற தீய குணங்கள் மாறும் போது உதவி செய்யும் மனபாண்மையும் அன்பு காட்டும் தன்மையும் ஒவ்வொரு உயிரையும் மதிக்கும் குணமும் தானகவே வளரும் அப்போதுதான் உண்மையில் பெண்களுக்கும் வாழ்வும் உண்டு விடிவும் உண்டு

கவி மீனா