குருவியின் எண்ணம்
உயர உயர பறந்தாலும்
குருவியின் எண்ணம்
கூட்டிலே
சுத்தி சுத்தி வந்தாலும்
நிலவின் பாதை
வானிலே
ஓங்கி ஓங்கி அடித்தாலும்
அலையின் பாசம்
கரையிலே
வீசி வீசி போனாலும்
தென்றல் வாசம்
பூவோடே
ஓடி ஓடி பாய்ந்தாலும்
ஆற்று வெள்ளம் கடலோடே
விலகி விலகி போனாலும்
நெஞ்சின் நினைவு
உன்னோடே
என் நெஞ்சின் நினைவு
உன்னோடே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen