Dienstag, 4. Dezember 2012


குருவியின் எண்ணம்
உயர உயர பறந்தாலும்

குருவியின் எண்ணம் கூட்டிலே

சுத்தி சுத்தி வந்தாலும்

நிலவின் பாதை வானிலே

ஓங்கி ஓங்கி அடித்தாலும்

அலையின் பாசம் கரையிலே

வீசி வீசி போனாலும்

தென்றல் வாசம் பூவோடே

ஓடி ஓடி பாய்ந்தாலும்

ஆற்று வெள்ளம் கடலோடே

விலகி விலகி போனாலும்

நெஞ்சின் நினைவு உன்னோடே

என் நெஞ்சின் நினைவு உன்னோடே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen