Sonntag, 17. November 2013


கார்த்திகை தீபம்
 

கார்த்திகை தீபம் அங்கே

கடந்த கால நினைவுகள்தான் இங்கே

ஓடி ஓடி எங்கும் விளக்கு ஏற்றி

முற்றத்தலே பந்தம் ஏற்றி

அணையாமல் காத்திருந்து

 வானில் முழுநிலா வருமா

காதல் உலா தருமா என

காத்திருந்த காலம்

கன்னி என் மனசிலே அன்று

கார்திகை தீபமாய் ஒளி வீசிய காலம்

இன்று கலைஞர் தொலைகாட்சியில்

அண்ணாமலை தீபத்தை

வீட்டுக்குள் இருந்தே காண்கின்ற காட்ச்சி

விஞ்ஞான உலகத்தில்

நாம் காணும் தீப திருநாள்

தீப திருநாள்

கவி மீனா

 

உன் மூச்சில்
 

உன் கண்ணில் படவே

நானும் மண்ணில் பிறந்தேன்

நான் உன் உணர்வில் ஒன்றியே

உறவாய் கலந்தேன்

உன் மனதை திறந்தே நான் எண்ணில்லா

கவிதைகள் படித்தேன்

சில சமயம் உன் மார்பில் சேரும் மதளையாகி

என் அன்னை மடியாய் உனை நினைப்பேன்

மறு கணம் என் உயிரின் ஒளியாய்

உனை நினைப்பேன்

நீ என்னை தீண்டிய தென்றல் அல்ல

என்னை தாக்கிய புயலானாய்

எமக்குள் உள்ள ஒரு பந்தம்

யாருக்கும் புரியா சொந்தமடி

இது போன ஜென்ம தொடர்பு என்பேன்

ஏழு ஜென்மமும் தொடரும் என்பேன்

காலங்கள் கடந்தும் வளருமடி

நமக்குள் கவிதையாய் காதல் வளருமடி

ஒரு முறை தன்னும் உன் பேர் சொல்லாமல்

என் இதயம் துடித்ததில்லை

கடல் அலை ஓங்கி அடிப்பது

கரையை சேர்ந்திடவே

என் மூச்சு காற்றும் ஒங்கி இரைவது

உன் மூச்சில் கலந்திடவே

வானில் உலவும் நிலவும் வானத்தை

தொடவில்லை

என் கண்ணில் உலவும் பெண் நிலவே

உன் உயிரில் கலக்கும் ஒரு வேளை

என் வாழ்வின் முழுமையடி

(வேல்)

கார் த்திகை பௌர்ணமி
 

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும்

பௌர்ணமியில் விசேடமானது கார்த்திகை பௌர்ணமியே கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வருவதால்  சந்திரன் மிகுந்த ஒளியுடன் பிரகாசமாக காட்ச்சி அளிக்கும்

அன்று விரதம் இருந்து சிவபெருமானை துதிப்போருக்கு  சிவபெருமான் தேவியுடன் பூமிக்கு அருகே வந்து அருள்புரிவதாக நம்பப்படுகிறது

இன்நாளில்தான் சிவபெருமான் வானாளாவிய ஜோதிவடிவாக நின்றதாகவும் அடி முடி தேடி பிரம்மாவும் விஸ்னுவும் அவரை கண்டு கொள்ள முடியாமல் போனதாகவும் நமது இந்துமதம் கூறுகிறது

இதற்காகவே ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபங்களை கொழுத்தி நாம் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடுகிறோம்

அத்துடன் இன்று முருக பெருமானுக்கும் விசேட நாளாகும் கார்த்திகை பெண்கள் முருகனை வளர்த்ததாலும் கார்த்திகேயன் என அழைக்கபடும் முருகன் கார்த்திகை நட்சத்திரத்தில் அம்பிகை அருளால் ஒரு முக கடவுளானாதாகவும் சொல்லபடுகிறது  இன்நாளில் முருகனை வழிபடுவோருக்கும் முருகப்பெருமானின்  அருள் கிட்டுவதுண்டு  அப்பனுக்கும் மகனுக்கும் இன்று ஒரு முக்கிய தினம் ஆகும்

இந்நாளில் கங்கையில் விளக்குகளை எரியவிட்டு மிதக்க வைப்பது பெண்களின் வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது  இத் திருநாளில் பாவையர் வளக்குகளை ஆற்றில் விடுவது பற்றி சிலபதிகாரம் மணிமேகலை போன்ற பண்டைய இலக்கிய நூல்களில் மிக சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது

இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் மேலும் மற்ற நாடுகளிலும் வசிக்கும் இந்து மதத்தை சேர்ந்த அனைவரும் விளக்குகளை ஏற்றி   நாடெங்கும் ஒளி வெள்ளதில் மிதக்க வைப்பார்கள் இந்த காட்ச்சியை  கார்த்திகை தீப திருநாளை  கண்டு மகிழ கொடுத்து வைக்க வேணும்

கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள் மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார்

எங்கும் தீப ஒளியும் அகல்விளக்கும் ஒளி வீச  ஆலயங்களில் சொர்க்கப்பானை கொழுத்தி ஆராதிக்க திருவண்ணாமலை தீபம் ஜெக ஜோதியாக காட்ச்சி அழிக்க

வானதிலே பௌர்ணமி நிலா வண்ண அழகோடு காட்ச்சி தர இவை யாவும் கண்டு கழிக்க  இரு கண்கள் போதாது

இதை காணமுடியாது போனாலும் மனக்கண்ணால் நாம் மனதார இறைவனை நினைந்து வழி பட்டு எமது அக இருள் நீங்கி எமக்கு ஞான ஒளி கிட்டும் வண்ணம் வேண்டுவோமாக 

கவி மீனா