Samstag, 19. Oktober 2013


ஓர் மரத்து பறவைகள்

ஓர் மரத்து பறவைகளாய் ஓர் இடத்தில் வாழ்ந்திருந்து

ஒரு மொழியை பேசி வந்த ஈழத்து தமிழ் பறவைகள்

அமைதியை தேடி கூடு விட்டு பறந்ததையா

போகும்  இடம் தெரியாமல் புகலிடம் தேடியே

நாலு திசை எங்கும் பறந்து போனதையா

பல பல மரங்களில் தங்கி விட்ட காரணத்தால்

இவை பல மொழி பறவைகளாய் மாறி போனதையா

குஞ்சு பறவைகளோ சொந்த மொழி தெரியாமல்

தாய் தந்தையை புரிய முடியாமல்

தலை கீழாய் வாழுதையா இது தாங்காத சோகம் ஐயா

அன்னிய தேசத்திலே அகதிகளாய் வாழ்கையிலும்

அகம் பாவம் கொண்டதினால் ஒன்றுக் கொன்று உதவாமல்

தனி தனியே வாழுதையா தனி வழிதான் ஏகுதையா

பணம் தான் பெரிது என்று பாசத்தையே உதறி விட்டு

பாவிகளாய் வாழுதையா நேரம் இன்றி பறக்குதையா

வெளிநாட்டில் ஊறி விட்ட இந்த பறவைகட்க்கோ

சொந்த மொழி இல்லை சொந்த நாடும் இல்லை

சுற்றமும் இல்லை   சூ ழலும் இல்லை உள்ளத்திலும்

உடலிலும் சுகமுமோ இல்லை

எனி நினைத்தாலும் திரும்பாது ஊர் போக முடியாது

தொலைத்து விட்ட வாழ்வு தனை தினம் எண்ணி எண்ணி

துடிக்குதையா இரத்தக் கண்ணீர் வடிக்குதையா

மனம் இரத்தக் கண்ணீர் வடிக்குதையா

கவி மீனா

 

உறங்காத உண்மைகள்

 ஊர் எல்லாம் உறங்கையிலே நான் உறங்காது விழித்திருந்தேன்

உண்மை ஒன்று உள்ளத்திலே உறுத்தவே விழித்திருந்தேன்

காலம் எல்லாம் அழகு பார்த்து காத்து வரும் இந்த காயம்

கண்ணெறி பட்டதனால் காய்ந்து போயும் விடும்

மாறாத நோய்கள் வந்து மனதையும் தாக்கிவிடும்

அழகிழந்து பலம் இழந்து பாடையிலே போகும் வரை

ஆணவம் தான் நிலைத்து நிற்க்கும்

காற்று ஒன்று வெளியே வந்தால் காயமே இது பொய்யாகும்

இது காற்றடைத்த ஒரு பையாகும்

மாயையில் உழருகின்ற இந்த மாயா உலகத்திலே

மாழ்ந்து போனோமே இங்கு மாழாமல் வாழ்பவர் யார்?

என்னது உன்னது என்று எத்தனை சண்டை இங்கே

இதனால் உடைவது எத்தனை மண்டை அங்கே

இந்த வாழ்க்கையில் காண்பதும் எத்தனை பிரிவு

இறுதியில் நாம் போவதோ ஒரு தனி வழி தானே?

முடிவில்லா வானத்திலே பறந்து நாம் போகையிலே

முடிவாக எம்முடன் கூட வருவதுதான் எந்த உறவு?

இதற்க்குள் வாழுகின்ற போது வீணான தொல்லைகள் ஏன் நமக்கு?

ஆளுக்கு ஆள் அடிமை என்றும் அகம்பாவ பேச்சும் கொண்டு

நட்புக்குள் துரோகமும் செய்து நம்பிக்கை மோசமும் செய்து

எட்டிக்கு போட்டியாய் ஏக்கத்தாள பேச்சோடு

இல்லாத வம்பு சண்டைகள் தான் ஏன் வளர்ப்பு? 

இல்லை ஒரு சொந்தம் எமக்கும் என்றும் துணை நிற்க்க

இறுதியிலே கூட நம்மோடு வருவதற்க்கும்

இருக்கும் வரை ஏமாற்றம் ஏன் இந்த தடுமாற்றம்

மற்றவரை ஏமாற்றி நீ காண்பதென்ன? கொண்டாட்டம்

அடுத்தவன் வாழ்க்கையிலே நீ செய்யும் சோதனையால்

நீ படும் களியாட்டம் அது உன் சாதனையா?

சத்தியத்தின் வழி நடந்தால் சாகும் வரை நின்மதியே

மனச்சாட்ச்சி கேட்பதற்க்கு கேள்விகளும் இல்லையே

நீ மலர்களை மிதிக்காதே முள்ளையும் மிதிக்காதே

நீ நடக்கும் பாதையிலே மனங்களையும் நசுக்காதே

கூடாத உறவெல்லாம் எட்டாமல் எட்டி வீடு

ஆகாத சொந்தங்கள் அத்தனையும் மறந்து விடு

உன்னால் முடிந்தால் உதவிகள் செய்துவிடு

முடியாது போனால் உள்ளதை சொல்லிவிடு

குற்றங்களை கண்டால் உன் கருத்தை சொல்லிவிடு

சுத்தமாய் வாழ்வதற்க்காய் உன் மனதை சுத்தம் செய்துவிடு

பாவம் நீ செய்யாவிடில் பயப்படத் தேவை இல்லை

பாவிகளை சேர்கா விடில் பாதையிலே பயம் இல்லை

இதுதான் வாழ்க்கை என்று வாழும் வரை வாழ்ந்துவிடு

வாழும் காலம் வரை நல்லவனாய் வாழ்ந்துவிடு

கவி மீனா

 

 

பயிதியங்கள்

பயிதியங்கள் பல உண்டு குளறி கொண்டு தலையை பிச்சுக் கொண்டு தெருவிலே ஓடுபவன்தான் பயிதியம் என்று நினைகாதீங்கோ நித்தம் நித்தம் நம் வாழ்விலே பல பயித்தியங்களை நாம் சந்திச்சு கொண்டே இருக்கின்றோம்

பெண் பயித்தியம் பிடித்து அலைபவன் உண்டு பண பையித்தியம் பிடித்து அலைபவனும் உண்டு  பொறாமை என்னும் பையித்தியம் பிடித்து அலைகிற பையிதியங்கள் நாட்டிலே கூடி போய் விட்டது இப்படியாக பயிதியங்கள் பல விதம்

அன்பாக பேசி பழக தெரியாமல் கோப பட்டு மற்றவர்களுடன் கத்தி சண்டை போடுபவனும்  ஒரு வித பயித்தியம்தான் அல்லது அடுத்தவர்களை கோள் சொல்லி சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பா ர்பவனும் பையித்தியம்தான்

அடுத்தவங்களை சந்தேக கண்ணோடே பார்த்துக்கொண்டு கற்பனையில் பல தப்பான கற்பனைகளை வளர்த்து பொய் கதைகளை கட்டி பிரச்சனைகளை உருவாக்கும் பயித்தியங்களும் உண்டு

மனதை அமைதியாக வைத்து தன்னுடைய காரியங்களை மட்டும் பார்காமே எப்போ பாரு அடுதவனை பற்றியே சிந்திச்சு நெஞ்சம் குமுறும் னிதர்கள் கூட மனநிலை பாதிக்கபட்டுதான் அப்டி வாழுகிறார்கள்

பயித்தியங்கள் தமது குறைகளை கண்டு கொள்ள மாட்டார்கள் மற்றவன் தப்பு பண்ணுவதாகவும் முறை கேடா வாழ்வதாகவும் சொல்லி கொண்டு தன்னை தானே சமாதனம் செய்ய நினைபார்கள் காரணம் ஒரு சில சமயங்களில் அவர்கள் வெளியே சொல்லாவிடிலும் அவர்கள் மனது இடைகிடை சுட்டிகாடுவதாலோ தெரியவில்லை

வெளிநாடுகளில் பையித்தியங்கள் தெருவில் ஓடவில்லை காரிலே ஓடி திரியுதுகள் பாருங்கோ மன நிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் நம்மோடேயே இருக்கிறார்கள்  அவர்கள் தாங்கள் மன நோயாளி என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் அவர்களால் எமக்கு நிறைய தொல்லைகள் நித்தம் வந்து கொண்டே இருக்கிறது இதை நீங்கள் உன்னிப்பாக கவனித்து பாருங்கோ எதற்கும் நீங்கள் பைத்தியம் இல்லாமல் இருக்க வேணும் அப்போதான் உண்மை புரியும்

கவி மீனா