விதியின் மடியில் விழுந்தே
ஒரு
விழியின் நெருப்பில் மடிந்தேன்
காதல் என்னும் கவிதை எழுதி
கல்லின் உள்ளே நீரை தேடி
காலம் பூராய் வாடி நின்றேன்
கண்ணின் ஓரம் நீரை கண்டேன்
என்
சுவாசம் கிடைக்காதென்று
தெரிந்த போதும்
யாரை தேடி நானும் வந்தேன்
இடிந்து போன மனதோடு
நான் மடியும் காலம் வரையும்
காதல் கவிதை பாடி நிற்பேன்
காதல் கவிதை பாடி நிற்பேன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen