Mittwoch, 10. November 2021

 

நாட்டு நடப்பு

கொரோனா வந்ததும் வந்திச்சுது அது போறா பாடாய் தெரியலை என்னமோ சீனா காரன் செய்தது எல்லாம் கெதியிலை உடையும் என்பாங்கள் ஆனால் சீனா காரன் செய்து விட்டது என்ற சொன்ன கொரோனா அழியாமல் பெருகி கொண்டு அல்லே போகுது பாருங்க!


ஆயுதம் இன்றி ஆணுகுண்டு இன்றி நாலம் உலக மகா யுத்தம் நடக்குது இதில் யார் போவார் யார் இருப்பார் என்பது யாருக்குதான் தெரியும்?

வேலை வெட்டி இல்லாமலே வீட்டுக்குள்ளே முடங்குவோரும் சோறு தண்ணியில்லாமே பசியில் வாடுவோருமாய் நாட்டுக்கு நாடு பஞ்சம்

சினிமாவும் விழுந்தது வியாபாரமும் படுத்தது விவசாயமும் முடங்குது விலைவாசியும் ஏறி போச்சுது போற போக்கை பார்த்தால் வாய்க்கரிசி கூட கிடைக்காமல் போகலாம் காசு இருப்பவருக்கும்  வாங்க அரிசி இல்லை என்றால் காசையா சாப்பிட முடியும்?

இது மட்டுமா வேலைக்கு போக முடியாது சனம் வீட்டுக்குள்ளே முடங்கியதால் வீட்டுக்குள்ளே ஆணும் பெண்ணும் ஆளை ஆளு குத்தம் சொல்லி ஓயாத சண்டை சில வீட்டிய் இந்த நிலமையிலும் சன தொகை பெருகுது

வீட்டிலை பெண்களுக்கு வேலைக்கு ஓய்வில்லை வெட்டியாக ஆண்கள் ரெலிபோனில் அரட்டை இதிலை ரெலிபோன் யாருக்கு என்று அதிலும் சச்சரவு

காதுக்குள்ளை சொருகிவிட்டு கைதொலை பேசியிலை 24 மணி நேரமும் ஊர்வம்பு அரட்டை என கதைச்சக்கொண்டு வேலை செய்யும் பெண்களுமுண்டு சிலரு சின்னதிரை ஊர்வம்பு என பொழுது போக்கினதும் உண்டு இப்ப வீட்டிலை கணவன்மார் வோச் டோக் போலே நிற்பதாலே சில பெண்களுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் திரு திரு என்று முழிக்கிறாங்க பாருங்க!

வளவு இருந்தால் தோட்டத்தையாச்சும் செய்யலாம் வெளி நாடு வந்தவருக்கு தோட்டம் ஏது துரவுதான் ஏது?

அதிகமான தமிழருக்கு நாலு சுவருக்குள் வாழ்க்கை அதிலும் குளிர் வந்துவிட்டால் சிலர் ஐன்னலை கூட திறந்து விட்டு நல்ல காற்றை உள்ளை விடாத வீடு அங்கு சுவாத்தியம்தான் ஏது?

ஊரிலை காடு  கடற்கரை வரப்பு என நடந்தவர்கள் கூட வெளிநாடு வந்து கூண்டுக்குள்ளே வாழ்க்கை!

கூண்டு கிளியை துறந்து விட்டால் அது பறந்து போகுது ஆனால் வெளிநாடு வந்து கூண்டுக்குள்ளே வாழுகின்ற மனிதர்களை துறந்து விட்டாலும் பறக்க முடியாது காரணம் வாழ்க்கை மட்டுமல்ல காலும் முடங்கி போனது

இதுதாங்க உண்மை!

கொரோனா வந்ததாலே சுவாசிக்க காற்றும் இல்லை முகமூடி போட்டதாலே  மூச்சும் முட்டுது முக மூடிக்குள்ளே நிற்பது நண்பனா எதிரியா என்பதும் தரியியாமே காலங்களும் ஓடுது

இரண்டு ஊசி போட்டாச்சு நின்மதியாய் இருக்கலாம் என பார்த்தால் மூன்றாம் ஊசியும் போட சொல்லி வருமாமே சில வேளை ஒவ்வொரு வருடமும் போட்டாலும் போடலாம்

ஏதோ இருக்கும் வரை குத்த சொன்னா குத்ததானே வேணும் இறந்து விட்டால் மனிதனும் ஆளை ஆளு குற்றம் சொல்லி குத்தமாட்டாங்க ஊசியும் குத்த மாட்டங்க பாருங்க!

இதை விட பெரிய பிரச்சனை என்னவென்றால் கன பேரு வீட்டிலை இந்த கொரோனாவாலும் பசி பஞ்சம் அடக்கு முறையாலும் பயத்தாலும்  ஆளை ஆள் பார்த்து பார்த்து அலுப்பு தட்டி போனதாலே மனநிலையும் பாதிச்சு

மனநோயாளி ஆகி போனவங்க பல பேரு பாருங்க!

சில ஆண்கள் ஓடிஓடி அடுத்த பெண்களை பார்த்து சிரித்து நடுவிலை நின்று கும்மாளம் போட்டு தானும்

சுப்பர்மான் என்று ஐம்பம் காட்டினவங்க இப்ப மேடை இல்லை மைக்கும் இல்லை கொண்டாட்டமும் இல்லை

 முடங்கி போன வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை உணர்ந்து பார்க முடியாட்டி மனிதனாக பிறந்தும் பயனேதும் இல்லையே!

கொரோனா சிலருக்கு படிப்பினையாகவும்  சிலருக்கு தண்டனையாகவும்  அமைந்ததுதான் உண்மை!

கவி மீனா

 

சீழ் பிடித்தசிந்தனை 

டண்டநக்கா டண்டநக்கா

ஒரு தண்ட சோறு கிங்கு

புட்டுக்கிட்டு போட்டாரு இன்று

இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான்

என்று ஆனதுதான் வாழ்க்கை


இந்த மனித வாழ்க்கை

உட்கார்ந்த இடத்தில் இருந்தாரு

ஓடி ஓடி ஒழிந்தாரு

ஒட்டாண்டியா வாழ்ந்தாரு

காலன் வந்த போது வகையாகதான்

 மாட்டிகிட்டாரு

 

சுடுகாட்டில் பிணம் எரிந்த தீயும்

இன்னும் ஆறலை

கோட்டான் ஒன்று அலறுது

அவல சத்தம் கேட்குது

நாயும் நரியும் ஊளையிட்டு

ஓடி ஓடி திரியுது

கழுகும் காகமும் அடுத்தவன் சொத்தை

பிச்சு தின்ன சுற்றி சுற்றி பறக்குது

 

என்டை சொத்து என்டை சொத்து என்று

அடிபடுவோர்தான் எத்தனை

இன்றிருப்போர் நாளை இல்லை

இதுதானே உண்மை

சீழ் வடியும் உடம்புக்குள்ளே

சில மனிதருக்கு எத்தனை

சீழ் பிடித்தசிந்தனை

 

என்டை என்டை என்று சொன்னவர்கள்

ஒரு பிடி மண்ணை கூட

அள்ளி செல்ல முடிந்ததா?

கண்ணை மூடி விட்டாலே

காட்சி கூட தெரியுதா?

இந்த உலக காட்சி கூட தெரியுதா?

 கவி மீனா