Sonntag, 5. Juni 2016

சை சை
 
 
டங் டங் என்று ஒரு ஓசை
அது மழை துளி பேசும் ஒரு பாசை
இது நம் காதில் கேட்கும்  இசை
இயற்கை சொல்லும் அதன் மனசை
அதை கொண்டு வருவது காற்றின் விசை
 
 
 
 
 
சிலர் பேச்சோ ஒட்டும் பிலாக்காய் பசை
நாள் பூராய் போடும் சிலரது வாய் அசை
அழிவை தேடி தருவதே நம் ஆசை
றொட்டிக்கு மாவை கையாலே பிசை
 
 ஒருவர் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடினால் எசை
குற்றம் புரிந்தால் அன்று கிடைக்கும் அடி கசை
பேயாக அலையாதே நாளும் எண்ணி காசை
அழித்து விடு உன் உள்ளத்திலுள்ள மாசை
கவி மீனா
 
அரளி பூ
 


இது ஒரு நஞ்சு நிறைந்த பூ மரம் வெள்ளை சிவப்பு என இரு நிறங்களில் நான் கண்டு இருக்கிறன்
அரளியிலும் செவ்வரளி பொன்னரளி என்றும் பல நிறங்களிலும் இருக்கு என்பதை நான் வாசித்து அறிந்துள்ளேன்
இந்த பூவை பெண்கள் தலையில்  சூடுவதில்லை கோயில்களுக்கு அர்சனைக்காகவே கோயில் நந்தவனங்களிலும் வளர்கபடுகின்றன
ஊரில் இது காடு கரம்பு குளக்கரை வாய்கால் ஓரம் என எங்கும் காணப்படும் இந்த பூ மிக அழகாக இருக்கும்
இருந்தும் வீடுகளில் இதை வளர்க்க பெரிதும் யாரும் விரும்புவதில்லை காரணம் பயம்தான்
இதில் பூ முதல் வேர் காய் வரை சஞ்சு தன்மை இருப்பதால் அதை தெரியமல் தன்னும் யாராச்சும் பிள்ளைகள் தொட்டு அளைந்து வாயில் வைத்தால் மரணிக்க நேரிடும் என்ற பயத்தில் இந்த மரம் வீடுகளில் வளர்பது குறைவு
ஆனால் கோயிலில் அர்சனைக்காக இந்த பூக்களை பறிக்கிறார்கள் அல்லது யாராச்சும் தற்கொலை செய்ய விரும்புபவர்கள் இந்த மரத்தின் காய்களை பறித்து அரைத்து சாப்பிட்டு இறப்பதாக பல  தமிழ் படங்களில் காட்டுகிறார்கள்
இதை ஜேர்மனியில் ஒலியாண்டர் ( Oliyander ) என சொல்வார்கள் இது இங்கு விலை உயர்ந்த பூக் கண்டு  இங்கு சமர்காலங்களில் வெளியில் வைக்கலாம் குளிர்காலங்களில் சட்டியில் வளர்கும் பூக்கன்றுகள் உள்ளுக்கு எடுத்து வைக்காவிடில் பட்டு விடும்
 
நஞ்சு மரம் என்று தெரிந்தும் நானும் இங்கு பல்கணியில் வைத்து வளர்கிறன்
நச்சு பாம்புக்கு பால் ஊத்தி வளர்பது போலே
தண்ணி ஊத்தி வளர்கிறன் மரம் தானாக வந்து என்னை கடிக்காது என்பதால்
 
கண்ணை பறிக்கும் அழகான  பூவுக்கு இப்படி ஒரு நஞ்சு தன்மையா? என சிந்திக்க தோன்றுகிறது
கண்ணுக்கு அழகாக இருக்குது என்று நாம் எதையும் ஆசை படகூடாது என்பதற்கு இது ஒரு இயற்கை யின் எடுத்து காட் டோ?
இறைவனின் படைப்பில் எத்தனை புதுமை ?
 
கவி மீனா