என் காணி என் காணி
பாழ்பட்ட காணியும்
இந்த பரதேசிகள்
வாழ்க்கையும்
மணி அக்கா வீடு இன்று கை மாறி போச்சுது
அக்கம் பக்கம் சுற்றம் எல்லாம் ஏமாந்து நிக்குது
என் காணி என் காணி என்று கக்கத்திலே
உறுதியை கட்டி கொண்டு திரிந்த
மணி அக்கா ஆவியும் அந்தரத்தில் தொங்க
கூட இருந்து கூட பிறந்தவளுக்கே குழி பறித்து
அந்த வீட்டை பாழடைய விட்ட
சோம்பேறி ஆவியும்
அலறி புடைத்து ஓட
பரம்பரை காணி என்று பெருமை பேசி திரிந்த
பரதேசிகள் வாழ்க்கையும்
காலத்தோடு அழிந்து போக
போனதையா பூமி கை மாறி போனதையா பூமி
மாங்காய் என்றும் தேங்காய் என்றும்
முருங்கைகாய் என்றும் ஓடி ஓடி மேய்ந்த
முன் வீட்டுகாரரும் வயிற்றிலடித்து அழ
கம்பி வேலி போட்டு காணியை தனதாக்க
திட்டம் போட்ட துரோகி பக்கத்து வீட்டுகாரனும்
தலையில் கை வைத்து ஒப்பாரி வைக்க
வீட்டுக்காக வீடு பூந்து
வட்டமடித்து
ஏமாற்றி பெண்ணை பிடித்து
வீட்டுக்காக சுற்றி சுழன்று
நித்தமொரு சண்டையை உருவாக்கிய
புத்திசாலி மாப்பிளை இன்று
தன் புத்தி கெட்ட தனத்தாலே
ஏமாளியாகி போக்கத்து நிக்க
போனதையா பூமி கை மாறி போனதையா பூமி
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்
என்று பாரதி கூட ஆசைபட்டான்
ஆசை பட வைக்கும் காணி நிலம்
ஒன்றும் யாரோடும் கூட போவதில்லை
மண்ணுக்கு ஆசைபட்டவன்
மண்ணுக்குள்ளே போகிறான்
மண்ணுக்கும் பெண்ணுக்கும்
பொன்னுக்கும் ஆசை பட்டு
பரதேசிகள் வாழ்வு மண்ணாகி போகுது
ஆசைகளை வளர்துவிட்டால்
அவல பட்டு சாகுதுகள்
வேணாம் என்று விட்டு விட்டால்
நெஞ்சுக்கு நின்மதிதான் கிடைக்கும்
கிடைபது கிடைக்கும் என நினைத்தவிட்டால்
வருவது வரும் போவது போகும்
எதுவும் நமக்கு சொந்தமில்லை
இதுதாங்க உண்மை! இதுதாங்க உண்மை!
கவி மீனா