Sonntag, 22. November 2020

 

கொரோனா 

சீனா காரன்தான் கொரோனா வீருஸ்சை கண்டு பிடிச்சு  மற்ற நாடுகளுக்கு ஏவி விட்டதாக ஒரு வதந்தி பரப்பினம் அப்படி அவனது செயல் என்றால் அவன் ஏன் தன்டை நாட்டுக்கே அதை விடுகிறான்?

சிந்திக்காமல் புரளி பேசும் மனிதர்கள்  கொஞ்சம் சிந்திச்சு பாருங்க!

அப்படி இந்த நோய் கிருமி சீன தயாரிப்பு என்றால் அவன் எம்மட்டு புத்தி சாலி பாருங்க!



அணுகுண்டை தயாரிக்கும், றொக்கெற்றை விண்வெளிக்கு விடும்  அமெரிக்கர்களால் கூட இதை அழிக்க ஒரு மருந்தை கண்டு பிடிக்க முடியவில்லையே!

ஒரு நாட்டையல்ல அகில உலக நாடுகளையே நடுங்க வைக்குது இந்த கொரானோ, கட்டியணைத்து முத்மிட்டவர்களும், கட்டிபிடி வைதியம் பார்த்தவர்களும், டிஸ்கோ, பார் என்று கூடி கும்மாளம் போடுபவர்களாலும்,

இன்றைய நவின காதலர்கள் அதாவது தினம் ஒருவனையோ ஒருத்தியையோ மாத்தி மாத்தி பிடித்து சல்லாபிக்கும் நவீன காதலர்களாலும்,  சாமத்தியம், கல்யாணம், வளைகாப்பு, பிறந்நாள் என்று கொண்டாட்டங்கள் வைத்து கூடி குழுமி போடுகிற ஆடம்பர விழாக்களாலும்,  செத்தவீடு ஊரிலை நடந்தாலே இங்கே கூடி அழும் நம் தமிழர்களாலும் கடத்தபடும் இந்த வைரஸ் அப்பாவி மக்களையும் சேர்த்து கொல்லுது தெரியாமல் பக்கம் நின்ற காரணத்தாலே!

இதன் தீவிரத்தை உணர்ந்து எனியாவது தள்ளி நில்லுங்க, ஆளை ஆழு முட்டாமல் தூர நின்று கைகாட்டுங்க என்று சொன்னாலும் இந்த சுவையை கண்டவர்களுக்கு அதை ஏற்று கொள்ள முடியாது, களவாக தன்னும் சந்திச்சு கட்டிபிடி வைதியம் பார்கிறாங்க!

அப்ப நோய் பரவாமல் என்ன செய்யும்?  ஒரு உடம்பில் பதினாலு நாள்தான் இந்த கொரானோ உயிர் வாழுமாம், ஒரு முறை கொரானோ பிடித்து அதிலிருந்து தப்பி உயிர் வாழுபவர்களுக்கு அது மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாதாம்.

 ஆனால் கோரோனா தாக்கிய மனிதர்கள் கை பட்ட இடத்தில் கூட கொரானோ குறைந்தது ஒரு சில  மணித்த்தியாலம் குந்திக்கொண்டு இருக்குதாமே சாகாமல் அடுத்தவனை காவு வாங்க!

பேய் பிடிச்சால் கூட ஒருவனையோ ஒருத்தியையோதான் பிடிக்கும் ஆனால் இந்த கொரானோ டப் டப்பென்று பாய்ந்து பாய்ந்து பிடிக்குது கைக்கு எட்டிவர்களை எல்லாம்.

இது ஒருவேளை வேற்று கிரகங்களிலிருந்து வந்து இறங்கியிருக்குமோ எனக்கு ஒரு சந்தேகம்தான் மற்றவனை சொல்லிபோட்டு நான் வேறே புரளி கிழப்பி விடவில்லை ஆனாலும் யோசிக்க தோணுது,

எந்த சரித்திரத்திலும் இப்படி ஒரு நோய் அகில உலகையே அள்ளி கொண்டு போக பரவவில்லை! இது ஒரு பார தூரமான பாதிப்பு!

கொரோனா கோரோனா கருணை காட்டு என்று கேட்டாலும் வீடுகுது இல்லை, யாருக்கும் அஞ்சாத சனங்கள் கூட இந்த நோய்க்கு அஞ்சி ஒழிக்க நேரிடுதே!

 பெற்ற பிள்ளைகள் பேர பிள்ளைகளை கூட அணைக்க முடியாது தடுக்கும் இந்த நோய்   மனிதர்களுக்கு வந்த சாப கேடே!

வட்ஸ்அப்பிலும், ஸ்கைபிலும் பிள்ளைகளுக்கும், பேரபிள்ளைகளுக்கும் முத்தம் கொடுக்கும் காலமிது, இணையத்தோடு இணைய தெரியாத வயோதிப சனம் எம்மட்டு தனிமையிலே பூட்டிய வீடுகளுக்குள் மனமொடிந்து சாகுதுகள்,

இது யார் செய்த பாவமோ நான் அறியேன்.

அன்று ராவணன் ஒருவன் செய்த பாவத்துக்கு அனியாயமாக இலங்கையே தீபிடித்து எரிந்ததாம் அதுபோல் இன்று எவன் செய்த பாவமோ எல்லாரையும் பிடித்து விரட்டுது.

கைகழுவு கைகழுவு என்று சொல்கிறார்களே கை கழுவி விட்டால் உறவுகளை கைகழுவி விடலாம், ஆனால் கொரானோவை கை கழுவினாலும் மூக்கினுடாக  அல்லது  வாயினுடாக உள்ளே போய் விடும்.

 இப்போதெல்லாம் முகத்தை மூக்கை மூடிகொண்டுதான் வெளியே போக வேண்டியிருக்கு முகமூடி கொள்ளைகாரர்களை போலே, இதிலை பக்கத்திலை உண்மையான மூகமூடி கொள்ளைகாரன் நின்றாலும் தெரியாது பாருங்க!

இன்றைக்கு கதைச்ச ஆளு நாளை இருப்பாரா? என்பதே தெரியாத நிலமை இன்று,

சிலபேருக்கு எந்த நோய் தொத்தினாலும் ஒன்றும் செய்யாது ஆனால் அவர்களால் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உண்டு.

கடைகளுக்குள்  குறைந்தது 2 மிற்றர் தள்ளி நிக்க சொல்கிறார்கள் ஆனால் கடைக்குள் முந்தியடித்து சாமான்களை அள்ள நிக்கும் சனங்கள் இடித்துக்கொண்டு போக நிக்கும் போது இடைவெளி குறைந்துதான் போகிறது.

சாவு என்பது எல்லாருக்குமுண்டு ஆனால் ஒட்டுமொத்தமாக செத்தால் ஒழுஙகான செத்தவீடு கூட நடக்காது.

கும்பலொடு கோவிந்தா கோவென்று எங்கை கொண்டு போய் போடுறாங்களோ தெரியாது.

சாம்பலை கடலிலை கரைக்காட்டி ஆவி அந்தரத்திலை தொங்கும் ஆத்ம சாந்தியின்றி, அந்த பயம்தான் பாருங்கோ எனக்கு!

பிறப்பெடுத்து அந்தரித்தேன் இறப்பின் பின்பும் அந்தரிப்பா? அதை நினைத்தால்தான் பயம் வருகுது!

கடவுளை கும்பிடும் இந்துக் கோவில்கள், தேவாலயங்கள்,  மசுதி யாவற்றையும் மூட வைத்தது கொரோனா!

அப்படியானால் கொரோனா ஒரு நாஸ்தீகன் என்பது தெரிகிறது.

எந்த  கிரகத்திலிருந்து வந்தது என்பதுதான் புரியவில்லை எனக்கு!

புரியாத புதிராக கொரோனா கண்ணுக்கு தெரியாத எதிரியாக கொரோனா!

 

 

நீ

மனிதனே  குணத்தாலும்

செயலாலும் மிருகம் நீ

கூட்டமாய் வருவதிலே பன்றி நீ

மனம் தாவி பாய்வதிலே குரங்கு நீ

கண்டபடி கத்தி குரைப்பதிலே நாய் நீ

சீறி கொத்துவதில் பாம்பு நீ

அடுத்தவரை முட்டி மோதுவதால் எருமை நீ


தட்டி பறிபதிலே காகம் நீ

சதி வேலை செய்வதிலே குள்ள நரி நீ

வெறும்  தோற்றதிலே மட்டும் மனிதன் நீ

மனிதன் நீ

 

Dienstag, 22. September 2020

 


அமைதி

எங்கு தேடியும் அமைதி கிடைக்காத போது

அமைதியை நாமே மனதில் உருவாக்க வேணும்

அதற்கு ஆசைகளை துறவுங்கள்

ஒவ்வொரு ஆசைகளாய் கை விடுங்கள்

நெல்லுக்கு களை எடுபது போலே எம்மை

சுற்றி வரும் உறவுகளுக்குள்ளும்

களை பிடுங்கி எறியுங்கள்

நாம் போகும் பாதையிலுள்ள நெருஞ்சி

முட்ககளை தூக்கி தூர வீசுங்கள்

 

உடலுக்கு ஒய்வு கொடுப்பது போலே

 நம் சிந்தனைக்கும் ஓய்வு கொடுங்கள்

உடலில் உள்ள அழுக்கை கழுவி விடுவது போலே

அகத்தே அழுக்கு சேராமல்

தூய்மையான மனதை பேணுங்கள்

காசுக்கும் காமத்துக்கும் அலையாதீர்கள்

பொறாமை கொண்ட உறவுகளை சேராதீர்கள்

கடவுளை நம்புங்கள் உங்கள் கடமைகளை மட்டும் செய்யுங்கள்

 

ஆரோக்கியத்தை பேணுங்கள்

அடுத்தவனது வீட்டை பார்த்து ஏங்காதீர்கள்

கடைசியில் எதுவும் கூட வராது

என்பதை நினையுங்கள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தாக

இருபதை கொண்டு நிறைவாக வாழுங்கள்

இதுவே அமைதியை தரவல்லது!

கவி மீனா

 

 https://issuu.com/home/published/_________________

Sonntag, 6. September 2020

 நாட்டு நடப்பு 4

கொரோனா வந்ததும் வந்திச்சு கல்யாண வீடு சாமத்திய வீடு பேத்டே பாட்டிகள், பல்லு கொழுக்கட்டை கொட்டுதல், வளைகாப்பு, கல்யாணநாள் கொண்டாட்டம் என்று யாவுமே ஸ்தம்பித்து நிக்குது பாருங்க!

இது எத்தனை பேருக்கு மன கஸ்டத்தை கொடுகிறது தெரியுமா?  இந்தியா சிங்கப்பூர் எல்லாம் போய் வாங்கிய சேலைகள் நகைகள் சுடிதாருகள் எல்லாம் எப்பதான் போட்டு அடுத்தவர்களுக்கு காட்டுவது? என பல பேருக்கு இங்கு மன வருத்தம்,  காசு கொடுத்து பார்த்து பார்த்து வாங்கியது எல்லாம் அலமாரியில் அடுக்கி வைத்து என்ன பிரயோசம் பாருங்க!

அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிபது போலே புலம் பெயர்ந்து வந்தவர்களில் பலர் காணாததை கண்டு விட்ட கழிப்பில் நெடுக கொண்டாட்டம் வைப்பதும் அதற்கு மேடை பேச்சாளர்கள் வேறே மைக் பிடிக்க  மேடை ஏறுவதும்   எல்லாம் இங்குதான் நடந்ததுங்க !

இதிலை கொண்டாட்டம் வைத்து கோடி உடுத்தி அன்று ஒருநாள் கூத்து வைத்தால் அவர்களது தரம் உயருமா? இல்லை தன் வாழ்வை சீராக வாழ தெரியாதவன் எல்லாம் மேடை ஏறி பேசி விட்டால் பெரிய இலக்கியவாதி ஆகி விட முடியுமா?

இது எல்லாம் அற்ப ஆசையுங்க அதை கூட இன்று இந்த கொரோனா வந்து தடுத்து வைத்திருக்கு என்றால் இவர்களது மன நிலை என்ன பாடு படும் சொல்லுங்கோ?

இளசுகள் கல்யாணம் ஆகி ஒன்று சேர முடியலை என்ற ஏக்கத்திலும்  பெரிசுகள் தங்கள் ஆடம்பர விழாவை வைத்து பவுசு காட்ட முடியலை என்ற வருத்ததிலுமே வாடுதுகள் பாருங்க!

எத்தனையோ ஏழைகள் ஊரடங்கு சட்டம் போட்டதாலே தண்ணி இல்லா காட்டிலே தவிக்குதுகள் அன்றாடம் உழைத்து உண்ட சனம் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வாடுதுகள், இதை எல்லாம் அறியாத சனம் கொண்டாட்டங்களும்  ஆடம்பர வாழ்க்கையும் தடை பட்டதை நினைத்தே வருந்துதுகள் என்றால்  இவர்களை என்ன சொல்ல ?

கொரோனா வைரஸ் வந்து பெற்ற பிள்ளைகளை கூட காண முடியாது தவிக்கும் பெற்றவர்கள் நிலை தெரியுமா?

பேர பிள்ளைகளை கட்டியணைத்து ஒரு முத்மிட முடியாமல் ஏங்கும் பேரன் பேத்தி  நிலை புரியுமா?

தனித்து விட பட்ட மனிதர்கள் வெளியிலும் போக முடியாது பயத்தோடு நாலு சுவருக்குள் அடை பட்டு கிடக்கும் நிலைதான் அறிவார்களா?

இதை எல்லாம் விட்டுட்டு என்ன இந்த தொற்று பரவியதாலே நாம குறித்த தேதியில் கொண்டாட்டம் வைக்க முடியலையே என்போரும்  50 ஆவது பிறந்த நாளை இப்ப கொண்டாடாமல் அடுத்த வருஸம் கொண்டாடலாமா? நாள் போக போக வயதும் ஏறி போகுமே என்று சிந்திப்போருமாய் சில பேரு!

இல்லாவிடில் இங்கு ஒரு பெண்மணி கொண்டாடியது போலே, ஆயுளுக்கும் வந்த எல்லா பிறந்த நாளையும் சேர்த்து ஒருநாள் கொண்டாடமாய் வைத்தது போலே  எனி வருங்காலத்தில் கொண்டாட வேண்டியதுதானே?

50 ஆவது பிறந்தநாளை இல்லை ஒரு நாளுமே வாழ்க்கையில் பிறந்த நாளை கொண்டாடாத பெண் ஒருத்தி இங்கை வந்ததும் அடுத்தவர்கள் பேத்டே பாட்டி வைக்கினம் என்று தானும் வைப்பம் என்று ஒருநாள் எல்லாரையும் கூப்பிட்டு பாட்டி வைத்தா எத்தனை வயது என்று கேட்டால்  சொல்லவே இல்லை

இரகசியமாக சொன்னா தான் 50 ஆவது கொண்டாடாத படியால் இப்ப கொண்டாடுவதாக எப்ப சொல்லுங்கோ 56 வயதிலை!

சரி விட்டு தள்ளுங்க ஆசைக்கு வயது ஏது?

கொண்டாட்டம் வைப்பவர்கள் ஒரு பககம் வாடி நிக்க,  இந்த மதம் மாறிய கூட்டம் ஒரு பக்கம் தாங்கள் சபை கூடுறது என்று சொல்லி

கிழமைக்கு இரண்டு தடவையாச்சும்  ஆண்கள் கோட் சூட் என்ன,  பெண்கள் டொக்கா சப்பாத்து என்ன ? ஆடை அலங்காரத்துடன் கூடி கூடி ஓத முடியலை என்று அழுவுறார்கள் பாருங்க!

நெஞ்சிலை உளள ஆசையை அழிக்க முடியாத இந்த சனம் பேரவா  பிடிச்சு அடுத்தவன் சொத்துக்கும்,  அடுதவனை பிடித்து உதவி பெறவும் நாய் பேயாக அலைவதை மறந்து, கையிலை ஒரு பைபிளை தூக்கிட்டு  என்னமோ சபை கூடி கோஸம் போடுவதால் என்ன பயன் சொல்லுங்கோ?

ஆடையே இல்லாமல் ஒரு துண்டு கோமணத்தோடு சிலுவையில் தொங்கும் யேசுவை கும்பிட இவர்கள் கோட் சூட் போடாமல் போக மாட்டார்களாம்  இதை நினைத்தால் சிரிப்புதாங்க வருகுது !

பிறவி வேதகாரன் வெள்ளையனும் சேச்சுக்கு போராங்க  ஆடம்பரமற்ற ஆடைகளை அணிந்து ஞாயிற்று கிழமைகளில் போராங்கள் ஆனால் இங்கை புலம் பெயர்ந்து வந்து மதம் மாறிய சனம் படுற பாடு பெரிய அளப்பறையுங்க! 

கோயிலுக்கு போராக்கள் மட்டும் என்ன பக்தியாக முத்தியை தேடியா போராங்க?

இருக்கிற நகை நட்டை காட்டவும் வாங்கின சேலைகளை உடுத்தவும் என்று கோயிலுக்கு போரவங்க சில பேரு

அங்கு போய் அரட்டை அடிக்க சில பேரு,

வீட்டிலை வேலை செய்ய முடியாத பெண்கள் கூட கோயிலுக்கு போவதென்றால் தோய்ந்து குளித்து  அங்கை போய் மணி அடிச்சு பூசை முடியும் வரை தம்பிடிச்சு இருந்திட்டு, வெளியே போய் அரட்டை அடிக்கவும், கோவில் சாப்பாட்டை சாப்பிடவும் என்று போறவை சில பேரு!

பூசை நடக்கேக்கையே ஆளை ஆளு கண்ணாலை கதைபாங்க, ஐயர் மந்திரத்தை சரியா சொல்லுறாரா அது கூட யாருக்கும் புரியாது என்னமோ பிள்ளையாரும், முருகனும் அவருக்கு இரண்டு பெண்டாட்டியும், சிவனும் பார்வதியும் என்பது மட்டும் தான் சைவமா?

ஒரு தேவாரம் கூட தெரியாத ஆட்கள் தான் அதிகம் பேரு இங்கை! இதிலை சைவ புராணங்களையும் உபநிடதங்களையும் அதிலுள்ள தத்துவங்களையும் அறிந்தவர் யார் உள்ளார்கள்?

தேர்திருவிழாவிலை தேர் இழுக்கிற பெண்களென்ன, கற்பூர சட்டி ஏந்துற பெண்கள் என்ன  இவங்களிலை சில பேரு  அடுத்தவ குடும்பத்தை தெருவிலை இழுத்து விட்டவங்களுமுண்டு! அடுத்தவன் வாழ்க்கையில் பொறாமை தீயால்  கொழுத்தி எரிய விட்டவங்களுமுண்டு!

கோயிலும் இங்கை பணவரவுக்காக நடக்குது, போற சனமும் பொழுது போக்குக்காவும், ஊர்வம்பு பேசவும் அடுத்த பொண்ணு கட்டின சேலை எங்கை வாங்கினது? எவன் எவன் என்ன செய்யுறான்? என பேசவும் ஒரு பொழுது போக்கிடமாக கோயிலும் இங்கை மாறியது உண்மை தானுங்க !

நான் மதங்களை குறை கூறவில்லை கடவுளை பழிபதுமில்லை ஆனால் அந்த நிலையை உருவாக்கும் இந்த சனங்களைதான் நான் எடுத்துகாட்டுறன்.

அதுவும் போச்சா கள்ள வேலைக்கு பதுங்கி பதுங்கி அரசாங்கத்தக்கு தெரியாமல் யாராச்சும் காட்டி கொடுத்திடுவினமோ என்று பயந்தபடி  வீடுகளிலும் ரெஸ்ரோரண்டிலும் வேலை செய்தவர்களுக்கும் இப்ப கொரோனா ஆப்பு வைச்சுட்டுது பாருங்க!

படித்தவன்களுக்கும்   நல்ல வேலை செய்பவன்களுக்கும் நேர்மையாய் பதிந்து வேலை செய்தவனுக்கும்  முறையாக வேலை செய்து பென்ஸன் எடுத்தவனுக்கும் இப்ப வீட்டிலை நின்று வேலை செய் காசு கொடுக்கிராங்க

இந்த கள்ள வேலை காரர்களுக்கு  வாயிலை மண் தானுங்க!

இதுக்கு மேலே என்னத்தை சொல்ல ? நாளை  மேலும் சொல்ல முடியுமா தெரியாது இதுதான் இன்றைய நிலை!

போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாருடா? போனால் போகட்டும் போடா போடா!

கவி மீனா

 

 

 

 

 

Mittwoch, 15. April 2020


உயிர்கள் தப்பிச்சு 


கோழி கொக்கரக்கோ கொக்கரக்கோ
என்று பாடி கும்மாளம் போடுது
சேவல் கூட கூவி கூவி
கொண்டையை ஆட்டுது
காடு எல்லாம் முயல்கள்
துள்ளி குதித்து ஓடுது

ஆட்டுக்குட்டி மே மே என
மெல்லனவே மேயுது
கொலை தண்டனையிலிருந்து
தப்பி ய சீவன்களாய்
இவை இன்று சுதந்திரமாய் உலாவுது
ஈஸ்ரருக்கு வெட்டுவாங்கள்
என்ற பயமும் போனது

கொரோனா வந்ததாலே
இந்த உயிர்கள் தப்பிச்சு
வெட்டி வெட்டி திண்ட மனிதன்
இன்று அடை பட்டு கிடக்குறான்
அடை பட்டு கிடக்கும் மனிதரை  இவை
பார்த்து ஏளனமாய் சிரிக்குது!



ஆதி சக்தி 


உலகத்தில் உள்ள அத்தனை மதங்களை பற்றி வாசித்தும் கேட்டும் அறிந்த போதிலே எல்லா மதமும் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுதே ஒழிய கடவுள் யார் என்று யாராலும் சரியாக சொல்ல முடியவில்லை!

யேசு சொல்லியது பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவை பற்றி தான் சொல்ல வந்ததாகதான் சொல்லியிருக்கிறார்.

புத்தரும் கடவுள் இருப்பதாகவும் அந்த கடவுளுக்கு நாம் எவ்வழி நடந்தால் பிடிக்கும் என்று போதனைகளை சொன்னார்.

இஸ்லாம் மதமும் மேலே உள்ள ஒரு கடவுளை பற்றிதான் சொல்கிறது யாரும் கடவுளை காணவில்லை!

ஆனால் இந்து மதம் ஒன்றுதான் கடவுள் முழுமுதல் கடவுளாக சிவனை சொல்கிறது, அதிலும் சாத்வீக மதம் இன்னும் தெளிவாக  எல்லா கடவுளையும் அதாவது சிவன் பிரம்மா விஸ்ணு என சொல்ல படுகிற மும் மூர்திகளை படைத்தததும், அவர்களுக்கு துணையாக சரஸ்வதி, பார்வதி, இலக்குமி என மூன்று சக்திகளை உருவாக்கியதும் ஆதிபராசக்தியே என சொல்கிறது.

 அதாவது எல்லா கடவுளுக்கும் இயக்கமாய் இருக்கும் ஒரு மேலான சக்தி ஒரு பெண் சக்தி எனவும் அந்த பெண்சக்தியே அண்டத்தையும் மும்மூர்திகளையும் படைத்ததாக சொல்கிறது.

மும் மூர்திகளும் அவர்களது தொழிலை அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை செய்வதற்கும் சக்தியை கொடுப்பவளே அந்த ஆதி சக்தி அந்த ஆதிபராசக்தியென ஆதிசங்கரும் கூறியுள்ளார்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

ஒரு பெண்ணால்தான் ஒரு உயிரை உலகுக்கு கொண்டு வர முடியும் என்னும் போது மும் மூர்திகளையும் மூவுலகையும் அனைத்து உயிரையும் உருவாக்கியது ஒரு பெண் சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதுதான் உண்மை!

முழு முதல் கடவுள் என்று சொல்ல படுகிற சிவனே அதிகமான நேரம் தியானத்திலருபதும்  தனக்கும் மேலான ஒரு சக்தியைதான்  தியானிபதாகவும் சொல்ல படுகிறது, அவருக்கும் மேலான ஒரு சக்தி உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது அல்லவா?

அம்பிகை துதிக்கின்ற மதமே சாக்தம் என படுகிறது
சக்தியின் உடல் பாகங்கள் வீழுந்த இடங்கள் 51 சக்தி பீடமாக  அந்த இடமெல்லாம் இந்தியாவில் கோவில்கள் அமைத்து சிறப்பான முறையில் பிராத்தனை செய்து வருகிறார்கள் அம்பிகைக்கு!

சிவனோடு சக்தி இணைந்து நின்றாலும் சிவனுக்கு சக்தியை கொடுபது  அம்பிகை அவளே என்கிறது இந்துமதம் அதிலும் சாக்தம் என்ன சொல்கிறது என்றால்
சும்மா இருந்தால் சிவம் என்றும் இயக்கத்துக்கு வந்தால் சக்தி என்றும் சொலகிறது.

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்.
விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே--

என்று திரு மூலர் திருமந்திரத்தில் சொல்கிறார், அதாவது  ஒளிமயமாக விழங்குகின்ற மெல்லிய சக்தியாக பரமசக்தியாக ஞானபொருளாக திகழ்கின்றார் என்று பாடியுள்ளார்.

அப்படி பட்ட சக்தியை அம்பிகையை அந்த ஆதிசக்தியை  தொழுவோருக்கு துன்பம் ஏதும் உண்டோ?