Sonntag, 11. Dezember 2022

 ஒரு கூத்து 

அங்கும் இங்கும் ஓடுது காற்று

நீ ஓடி ஐன்னல் கதவை சாத்து

பாத்து பாத்து நடை போட்டு போகுது வாத்து

இங்கு கொண்டாட்டம் வந்தாலே

நெருப்பிலை வாட்டி பொரிந்தது நேத்து



பொய்யான வாழ்க்கையை மாத்து

இல்லை  நீ போடுற வேஸமே ஒரு கூத்து

நட்டு விளைந்தால் அது நெல்லு நாத்து

அதை வெட்டி அறுவடை செய்யுறான் பாரு காத்து

தினம் தேடி தேடி சேர்பது சொத்து

அதை விட்டு பிரிய மனமில்லாது போகிறான் செத்து

கவி மீனா

 

நாட்டு நடப்பு

என்னத்தை சொல்ல?  வர வர நாட்டிலை கொடுமைகளும் கொடியவர்களும் கொடும் நோயும்தான் கூடி போச்சுது முகங்களை மூடி திந்தாலும் மனுசர்களின் மனசிலை உள்ள ஆசைகளை மூடிவிட வழி இல்லை


எப்படா அடுத்தவனை அடிச்சு பறிக்கலாம் எவன் வாழ்வை கெடுக்கலாம் என்பதிலையே அலைகிறது சிலர் மனசு பாருங்க!

ஊரிலை தனியா சொந்த வீடு வளவிலை இருந்த ஒரு மனுசன் இறந்து விட்டாலே பக்கத்து வீட்டுகாரன் உடனே அந்த காணியை தனதாக்க படாத பாடு பட்டிருக்கிறான் செத்தவீடு நடந்து ஒரு கிழமை இல்லை அடுத்த வீட்டு காணிக்கு  கம்பிவேலி போட்டு திறப்பு போட ஆயத்தம் பண்ணிட்டான்,  அது யாருக்கு சொந்தம்? காணிக்கு உரியவர்கள் யார்? என்ற ஒரு  பயமே இல்லை அடிதடி பொலிஸ் விதானை என்று போய்தான் கடைசியா வீட்டு திறப்பையே அவனிட்டை இருந்து பறித்தது என்றால் பாருங்களேன்  யாழ்பாணத்திலை அடுத்தவர்களுடைய காணிய கள்ள கோழியை  அமுக்கினா போல அமுக்கி எடுக்க எம்மட்டு திட்டம் போட்டு அவன் வேலைசெய்திருக்கிறான் என்று, அது போக உயிரோடு மனிதர்களும் வாழும் போது எட்டி பார்காத இரத்த சொந்தம் என்று சொல்லி  யாரோ எல்லாம் அந்த காணிக்கா அடி பட்டிருக்குதுகள் அது மட்டுமா?

அந்த காணிக்கும் வீட்டுக்கும் ஆசை பட்டு வீடு பூந்து நல்லவன் போல் நடித்து நாடகமாடி ஏமாற்று வேலைகள் பல செய்து பெண்ணை எடுத்து அடிபாட்டுன் பிரிந்து போன ஒரு 80 வயது கிழவனும் அந்த காணியை தான் எடுக்கணும் என்று  ஆடாத ஆட்டம் எல்லாம் இந்த வயதிலும் போட்டாருங்க, தனக்கு  என்று ஒரு தனி சுடலை வேணும் என்று நினைத்தாரோ தெரியலை பாருங்க, ஆசைக்கு வயது கூட இல்லை அதுக்குதான் சொல்லுறன்  தனது ஊரு விலாசத்தை கூட மாத்தியே சொல்லி திரிந்தாரு அது தன்டை காணி என்று,  அவரு வாயிலும் இப்ப மண்ணுங்க!  மண்ணுக்கு ஆசைபடுங்க அது உங்க சொத்தா இருந்தா ஆசை படுங்க, அடுத்தவன் சொத்துக்கு ஆசைபட்டவன்  அடாவடிதனம் பண்ணினவன் எல்லாம் நல்லாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை பாருங்க! முடி ஆண்ட மன்னரும் மண்ணுக்குதான் சொந்தம் இதிலை அடுத்தவன் காணிக்கு ஏன் அலையணும்? இதைதாங்க நான் கேட்குறன், இது கிட்டடியிலை நடந்த உண்மை சம்பவமுங்க அதையும் நாட்டு நடப்பிலை சொல்லிவிடுவம் எப்படி சனங்கள் பாடாய் படுதுகள் என்று பாருங்களேன்

 

இந்த கதை மட்டுமல்ல இன்னும் பல தரமான உண்மை சம்பவங்களை சொல்லதானே நான் இருக்கன்

இங்கை லண்டனிலை ஒரு கிழடு 84 வயதிலை செத்ததுக்கு,  அவ மவ சொல்லியிருக்கா செத்த வீட்டுக்கு போட்டு வந்து அவருக்கு சோக்கு வந்து செத்தது என்று அந்த கதை அப்படியே பரவி அது என்ன சோக்கு வருத்தம் என்று சனம் திக்குமுக்காடி நிக்குதுகள் பாருங்க!

பகிடி என்ன என்றால் ஊரிலை பள்ளிகூடமே போகாமே இங்கை வெள்ளத்திலை அள்ளு பட்டு வந்த குப்பைகளை போலே தாங்க சில பேரு அவைக்கு வாய்குள்ளை ஆங்கிலை வார்தைகள் பூராதுங்க! அந்த ஆங்கில சொற்களை அவர்கள் உருமாற்றி சொல்லி அது ஒரு புது உருவம் எடுத்து உலாவுது கொரானா போல

அந்த ஆளுக்கு வந்தது  Stroke (Schlaganfall ) என்று வைத்தியர் சொல்லியிருக்கிறார் இதுகள் இப்படி மாத்திட்டுதுகள், இவ தாங்க முந்தியொருக்கா எனக்கு சொன்னவ ஊரிலை இருக்கிற காணியை விக்கிறதுக்கு ஊருக்கு போக தேவயில்லையாம் பட்டாணி எடுத்து எழுதலாம் என்று அப்ப நான் கேட்டனான் அது என்ன பட்டாணி கடலையா நீ வறுக்கிறாய் என்று?

அவ சொல்ல வந்த ஆங்கில வார்தை  இதுதாங்க (Power of Attorney )  இவ என்னமாதிரி ஆங்கிலத்தை மாத்தி சொல்லி திரியுறா அதை நம்ப கூட ஆட்கள் இருக்கினம் பாருங்க காரணம் அவைகளும் ஒரே குப்பையிலே ஊறின மட்டைகளுங்க!

ஆங்கிலம் மட்டுமா? டொச் மொழியும் இப்படிதாங்க நம்ம சனத்துண்டை வாயிலை  அறம் புறமா உரு மாறி சவுண்ட் மாறி போகுது பாருங்க! ஆனாலும் இவர்களுக்கு படிப்பு இல்லை பாஸை தெரியாது என்பதாலே ஏதோ வாழ்க்கை முடங்கி போகலை பாருங்க, யாருடைய கையை காலை பிடித்தாவது அதுகள் தங்கடை காரியம் பார்க்க கூடிய வல்லமை படைத்தவர்கள்தானுங்க!

காரியம் முடிய பின்னாலை உதையுற சனங்களும் இவர்கள்தானுங்க! காரணம் ஊரிலை நல்லா வாழ்ந்தவனும் படித்தவனும் நல்ல இடத்திலை பிறந்தவனுக்கும் கூனி குறுகி நிண்டு அடுத்தவன்கிட்டை கை ஏந்தவோ உதவி கேட்கவோ தன்மானம் விடாது, அதனாலே அவனுக்கு  உதவி கிடைப்பது எல்லாம் கொஞ்சம் கஸ்டம்தான், இதுதாங்க யானைக்கும் எலிக்கும் உள்ள வித்தியாசம் எலி உள்ள பொந்து சந்து எல்லாம் பூந்து போகுது

யானையாலை முடியுமா?

இதை விட புலம்பெயர்ந்து வாழும் இளைய தமிழ் சமுதாயத்தினுடைய வாயிலை நம்ம தமிழ் மொழி படுற பாடு பரிதாபமுங்க,   ஒரு சொல்லும் உருபடியான உச்சரிப்போடு வராதுங்க  அப்படி பேசி தமிழை கொலை செய்யுறதை விட அன்னிய மொழியை பேசி வாழலாம் பாருங்க, தமிழுக்கு வந்த சாபகேடு இதுங்க!

இந்த கொரோனா முன்னுக்கு நிக்குதா பின்னுக்கு நிக்குதா இல்லை பக்கத்திலை நிக்குதா என தெரியாமல் இருக்குது இதிலை 2 பேரு ஒன்று கூட 500, 1000 பேரை கூப்பிட்டு கல்யாணம் வைக்குதுகள் தமிழ் பெற்றோர்கள்

முன்னைமாதிரி என்னமோ கன்னி கழியாத ஆணுக்கும் பெண்ணுக்குமா இப்ப திருமணம் நடக்குது? அதுகள் தாங்களாக வாழ தொடங்கி விடுங்கள் பெற்றவர்கள் தாங்கள் கொடுத்த காசுகளை வாங்கவும், தங்கடை பவிசை காட்டவும் கொண்டாட்டம் வைக்கினம் கடைசியிலே வந்து போனவைக்கு எல்லாம் கொரோனா பிடிச்சு போகினமாம்  இதுக்கென்ன சொல்ல போறீங்கள்? அரசாங்கம் எம்மட்டுதான் எடுத்து சொன்னாலும் யாரும் தள்ளி நிக்கினம் இல்லை ஒன்று கூடி கும்மாளம் போடவே நிக்கினம் பிறகு கொரோனா எப்படி போகும்?

குடுத்த காசை வாங்கணும் என விரும்பினால் வீட்டுக்கு முன்னாலை ஒரு பெரிய உண்டியலை வைத்து போட்டு எல்லாருக்கும் சொல்ல வேணும் நாங்க தந்த காசை கொண்டு வந்து உண்டியலுக்குள்ளை போடுங்கோ காரணம் நாம் எத்தனை நாள் இருப்பம் என தெரியாது என்று இது ஒரு யோசனை தாங்க !

செத்த வீடு வந்தா கூட ஒரு ஆளு மேலே போனதுக்கு எல்லாரும் கூடி ஒப்பாரி வைத்து அங்கும் கொரோனாவாம் அப்ப எல்லாரும் உடன் கட்டை ஏற போனமாதிரி அல்லோ இருக்குது சேர்ந்து அழுதாதான் துக்கமா?

தண்ணிக்குள்ளை சேர்ந்து கத்துற தவளைகளே இரவு முழுதம் தாளம் போட்டு கத்திட்டு விடிய செத்து போகுதாம்

சுத்தமும் சுகாதாரமும்தான் கொரோனாவை தள்ளி வைக்கும்  இது ஏன் புரிய மாட்டேங்குது நம்ம சனத்துக்கு?

நானும் அங்கிட்டு இங்கிட்டு கேட்டதும் நடந்ததுமாக கதை சொல்லிட்டன் பாருங்க  சுகம் பலமாக இருந்து எனி காலம் கை கூடினால் புதினங்களும் சேர்ந்தால் மீண்டும் சந்திப்பம் நாட்டு நடப்பில்

கவி மீனா

 

Freitag, 18. November 2022

 

இப்படியும் சிலர் 

அடுதவனை அழிக்க என்ன வழி என்றே நாள் பூரா சிந்திக்கும் சிலரும்

பக்கத்து வீட்டு காரனுக்கு ஐம்பம் காட்ட கடன் பட்டு கார் வாங்குவோர் சிலரும்

அடுதவன் காசை சுருட்டி கொண்டு ஓட்டம் எடுப்போர் சிலரும்


வயிற்று பசியில் அலையும் ஏழைகள் உலகிலிருக்க  இங்கு காம பசியில் அலையும் சிலரும்

அடுதவன் நேர்மையான வாழ்வை  கண்


டே ஏழனம் செய்யும் சிலரும்

எனக்கு உந்த பழம் பிடிகாது உது புழிக்கும் என்று சொல்லி தமக்கு கிடைகாததை சாமாளிக்கும் சிலரும்

வயிறு முட்ட உண்டு புழிப்பு ஏப்பம் வந்தாலும் அடுதவன் வீட்டு சாப்பாட்டுக்கும் அலையும் அவா பிடித்த சிலரும்

சிலர் அண்ட புழுகராய் ஆகாச புழுகராய் இங்கை ஊரை ஏமாற்றிக்கொண்டுமல்லோ இருக்கினம்

எல்லாரும் கேட்டால் நாங்ககள் ஊரிலை ராசாக்கள்தான் என்று புழுகுவினம் அங்கு பள்ளிக்கு போகாதவனும் தான் அங்கை பட்ட படிப்பு படித்ததாக இங்கை கதை அளக்குறதும்,  அங்கை சாப்பாட்டுக்கு வழியில்லாமே இருந்தவர்களும்  தாங்கள் தோட்டம் துரவு வீடு வாசல் என்று வாழ்ந்ததாகவும் வாரவை போரவைக்கு எல்லாம் அன்னதானம் பண்ணியதாகவும் பெரிய பிரப்புக்கள் போலே கதை அளப்பினம்

இதிலை பகிடி என்னவெனில் ஐந்து பெண் பிள்ளை பெத்தால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி இதிலை ஏழு பெண் பிள்ளையோடே பிறந்த  ஒருத்தி சொல்லுறா தங்களுக்கு ஊரிலை ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பா 25  அல்லது 30 பரப்பு காணி சீதனமாக கொடுத்தவர் என்று 7 பிள்ளைகளுக்கும் இப்படி சீதனம் கொடுக்க அந்த அப்பாக்குதான் அந்த கிராமமே சொந்தமாக இருக்க வேணும் பாருங்க!

இத்தனைக்கும் மாப்பிள்ளைகள் கனக்க படித்தவர்களும் இல்லை டொக்டர் என்ஜினியரும் இல்லை

இவ இந்த மாதிரி இங்கை கதை அளக்குறா ஊரிலை சகோதரங்கள் அடுத்த வீட்டு காணியிலை மாங்காய் விழுகுதா? தேங்காய் விழுகுதா? என்று காவல் நின்று எடுத்தக்கொண்டு போனாதான் அன்றைக்கு வீட்டிலை சமையல் செய்யுற நிலமையிலை வாழுதுகள்

காணி பூமி இருக்க விட்டு போட்டு வெளிநாடு வந்தவர்களுண்டு ஆனால் ஊரிலை 25 பரப்பு காணி இருக்க அதை விட்டு போட்டு யாழ்பாணத்திலை வீட்டை விட்டு இறங்கி நடக்க இடமில்லாத ஒரு வீட்டிலை 6 பேரு கூடி ஒரு அறை உள்ள வீட்டிலை வாழுகிறது  நம்புகூடிய மாதிரியா இருக்கு?

யார் கேட்டார்கள் இப்படியெல்லாம் புழுக சொல்லி உண்மையான மனிதர்களென்றால் அப்படி கஸ்டப்படுகிற இனசனத்துக்கு அடுத்தவன் கிட்டே கை ஏந்தாமே வாழ வழி செய்து கொடுத்திருக்க வேணும் ஆனால் இவர்கள் பொய்யும் புழுகும் சொல்லி தாங்கள் அங்கும் பணக்காரார் இங்கும் பணக்காரர் என மார்பு தட்டி தம்மை தாமே மெச்சுகினம் இது ஒரு வாழ்க்கையா?

இப்படி சிலரும் பலருமாய் புலம் பெயர் வாழ்வில் மனிதர்கள்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று சொன்னர்களே! இப்படி பட்ட மானிடரை காணாமல் இருபதே அரிது என நான் நினைக்குறேன்

கவி மீனா

 

போனது எது?

சொந்த நாடு போனது


சொந்த மண்ணும் போனது

சொந்த வீடும் போனது

சொந்த மொழியும் போனது

சொர்கம் என்றும் நினைத்த

சொந்தங்களும் போனது

சுற்றி நிண்ட உறவுகளும்

சொல்லாமல் போனது

 

காதல் வந்து போனது

 கல்யாணமும் வந்து போனது

கடமைகளும் முடிந்து போனது

காலங்களும் ஓடி போனது

இளமையும் ஓடி போனது

எனி போவதற்கு எதுவுமில்லை

போனது எது என்று

எண்ணி  நீ கலங்காமல்

அதனால் இருக்கும் வரை இருந்து விட்டு

நீயும் சொல்லாமலே போய் விடு

கவி மீனா

 

Samstag, 22. Oktober 2022

 வாங்கி வந்த வரம்

குப்பைகளை கூட்டி எறியதான் வேணும்

வேண்டாத உறவுகளை தூக்கி வீசதான் வேணும்

இலைகளும் கருகி விழுவது போலே

உறவுகளும் குறுகி பிரியதானே செய்யுது

காலங்கள் மாறுவது போலேதான்

மனித மனங்களும் காலத்துக்கு ஏற்றாற் போல் மாறுது

தன்னைதானே உணராதவன் மனிதனே இல்லை

தலைக்கனம் பிடித்தவனையும் போதைக்கு அடிமையானவனையும்

கடைசிவரை திருத்தவே முடியாது

திருத்த போனால் கழுதைக்கு கிட்ட போய்

உதை வாங்கின கதைதான்



அவனவன் தலைவிதியை அவனே தேடுகிறான்

போதைக்கு அடிமையானவன் கடைசி வரைக்கும்

மீளமுடியாது  உளருகிறான்

போத்தில் மாறினாலும் போதை மாறுவதில்லை

போதை வஸ்த்து புத்தியை கெடுக்குது

வார்தைகளை உளற வைக்குது

உலகமே இருட்டில்  பகலும் இரவும் ஒன்றாகி

படுக்கையிலே கிடக்க வைக்குது

சுற்றமும் உறவும்  கூட இருப்பவரையும்

அவனுக்கு புரிவதே இல்லை

மதிப்பும் மரியாதையும் நடக்கிற முறையில்தான்

அவனவனுக்கு கிடைக்கும்

வார்தைகள் சரியில்லாட்டி நட்புகளும் உறவுகளும் நிலைபதில்லை

வாழ்க்கையும் நின்மதியாய் அமைவதில்லை

இதைதான் சொல்வார்கள் வாங்கி வந்த வரம் என்று

கவி மீனா

Samstag, 15. Oktober 2022

 

எந்தன் வீட்டு தோட்டதிலே

பட்டு இதழ் ரோசா

மொட்டு அவிழ்ந்து சிரிக்குது

பார்த்து மகிழ கண்களுக்கு

மோகனாய் இருக்குது

கட்டவிழ்ந்து மனசு

களிநடனம் புரியுது

சுத்தி சுத்தி வண்டு வந்து

எட்டி எட்டி பார்குது

 


வட்ட நிலா வானில் வந்து

ரசித்து விட்டு போகுது

விட்டு விட்டு தென்றலும்

வந்து வீசி வாசம் அள்ளி போகுது

தூரலோடு சாரல் வந்து

மெல்ல சிலிர்த்து நிக்குது

இயற்கையோடு மனசும்

 கலந்தே பேசுது

இத்தனையும் எந்தன் வீட்டு

தோட்டதிலே நித்தமும் நடக்குது

கவி மீனா


 நாட்டு நடப்பு -

நானும் புலம்பெயர்ந்த நாள் முதல் சுற்றும் முற்றும் நடப்பது பற்றி புலம்பிக்கொண்டே இருக்கிறன்


நீங்கள் என்ன சொல்லபோறீங்கள் எண்டு எனக்கு தெரியும் பாருங்க! இவ  என்னமோ வெட்டி முறிக்கிறாபோலே

வெட்டியா எழுதி தள்ளுறா என்று முணுமுணப்போர் சிலர் உண்டு,  எழுதுறது என்றால் சும்மாவா? கையாலே பேனை பிடித்து எழுதாட்டியும், கீபோட்டிலை தட்டி தட்டி  எழுதினாலும் விரலும் நோவும், சிந்திச்சு சிந்திச்சு மூளையும் களைத்து போகும்  என்னமோ எழுதினால் மனசு கொஞ்சம் பிரியாகுதுங்க! அவ்வளவேதான்.

மகா பாரதத்திலை பாண்டவருக்கு ஒரு வருடம்தான் ஐஞ்ஞாத வாஸசம் நமக்கு ஐஞ்ஞாத வாஸ்சம் தொடர்ந்து கொண்டே போகுது வாழும் வரை துன்பங்களுக்கு முடிவு இல்லை என்றாலும் உலக வாழ்க்கைக்கு ஒரு முடிவு வந்துடுமுங்க, காரணம் என்னதான் நாம் கொரோனாவுக்கும் யுத்ததுக்கும் பயந்து ஒழிந்து வாழ்ந்தாலும் ஒருநாள் இன்றோ இல்லை நாளையோ காலனின் கைக்கும் கண்ணுக்கும் நாம் எட்டி விடுவோமே! ஏனெனில் காலனுக்கு கையும் நீளம் கண் பார்வையும் நல்ல கெட்டியுங்க!

இப்ப நாலாவது ஊசியும் போட வர சொல்லிடாங்க உயிர் தப்பி வாழ ஆசைபடாவிடிலும் நோயின் கொடுமையை அனுபிக்க பயந்துதான் ஊசியெல்லாம் போட வேணடியிருக்கு எனி கொரோனா எந்த பேரிலை குட்டி போட போகுதோ அதுவும் தெரியாது.

இப்ப கொஞ்ச நாளா இணையத்தில் சாஸ்திரிகள் துலாம் ராசிக்கு  சனி குரு அதிசார பெயர்ச்சி அதிஸ்டம் உச்சத்திலை என்று புழுகி தள்ளுறாங்க அதிஸ்டம் பற்றி தெரியலை கொரோனோ உச்த்துக்கு போட்டுது இப்ப யுத்தமும் உச்சத்திலே இதுதாங்க உண்மை!

அங்கை ஒருத்தர்  யாரை பற்றி கதைச்சாலும் அவர் என்ன நம்பர் எண்டு கேட்டு போட்டு உதுகள் உருபடாதுகள் அவைக்கு நம்பர் சரியில்லை என்று சொல்லி போடுவார் ஆனால் 7 நம்பர் மட்டும் லக்கி 7 என்று புழுகி தள்ளுவார் காரணம் அவரது பிள்ளை 7 என்பதால் எத்தனை 7 நம்பர் ஆழுகி புழுத்து சாவுறாங்க?

ஒரு ஆம்பிளை 7 நம்பர் 7 தடவை கட்டியும் கடைசியிலே வீடுழந்து பிள்ளை குட்டிகளை இழந்து அனாதையாகதான் செத்தாரு இன்னும்  ஒருத்தர் அப்படிதான் கடைசியிலை கிடந்து அழுந்துறாரு

7 இலை பிறந்த பெண் ஒருத்தி அடி சூடுவாங்கிக்கொண்டு கைகட்டி வாய் பொத்தி புருஸனுக்கு அடிமையா கிடக்குது, புருஸன்காரன் வீட்டிலை நிண்டா அவவுக்கு யாரோடும் ரெலிபோனில் பேச கூட விடமாட்டான் என்றால் பாருங்களேன்  இன்னுமொரு பிள்ளை 3 வாட்டி கட்டியும் வாளாவெட்டியாகிதான் நிக்குது இதிலை 7தான் நல்ல லக்கி நம்பர் என்று சொல்லுகிறவர்களை என்ன சொல்ல?

நம்பரிலை என்ன இருக்கு? எல்லாம் அவனவன் கர்ம வினைக்கு ஏற்றா போலேதான் வாழ்க்கை அமையுது

முன்னை செய்ததை சாக முன்னரும் அது தப்பினால் அடுத்த பிறப்பிலும் தண்டனைகள் தொடரும் இதுதானே இந்து மதம் சொல்கிறது குறிப்பா கருட புராணம் சொல்லுதுங்க!

இன்னும் விஸயங்கள் இருந்தால் அடுத்த முறை சொல்லுறேனுங்க