குருவி குஞ்சு
கூட்டை விட்டு என்னாலே பறக்க முடியலை
வானில் ஓடும் மேக கூட்டம் பார்து நான் ரசிகிறேன்
வெண்ணிலவின் அழகை நான் அள்ளி அள்ளி குடிப்பேன்
காணும் துரம் வரைக்கும் பசுமை கண்ணை பறிக்கும்
வண்ண வண்ண பூக்கள் என்னை மின்னி மின்னி இழுக்கும்
பறந்து செல்ல ஆசை கொண்டேன் பாதையின்றி தவிப்பேன்
ஓடும் நதியின் ஓசை என் காதில் சங்கீதம் பாடும்
உயர்ந்த மலையின் சிகரம் என் எண்ணங்களை உயர உயர வைக்கும்
கடவுளின் கை வண்ணங்களை உலகில் கண்டு வியப்பேன்
மனசு போகும் தூரம் வரை பறக்க நானும் துடிப்பேன்
இறக்கை இன்றி நானும் பாவியாகி தவிப்பேன்
பாவியாகி தவிப்பேன்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen