Sonntag, 6. Mai 2018


முதுமையிலே தனிமை
ஏதோ ஒரு சோகம்
என்னுள் இளையோட
யாரும் கூட வர போவதில்லை
என நினைத்து பார்த்தேன்
பாதையிலே வருபவர் எல்லாம்
பாதி வழியில் மாறிடுவர்
கடைசி வரை சேர்ந்திருப்போர்
ஒன்றாய் மடிவதில்லை
 என்றோ ஒரு நாள் யாவரும்
தனிமையை அறியதான் வேண்டும்
இதுதான் வாழ்க்கை!

இளமையில் கூடி வாழ்ந்து
கோடிகளை ஓடி சேர்த்து
முதுமையிலே தனிமை வந்து
மனம் நொந்து
இறைவனை நினைக்க வைக்கும்
அதுவும் இறைவன்
இட்ட வழியென நினைத்தால்
காற்றில் கரையும் மேகம் போலே
எம் துயரும் ஓடி போகும்
கவி மீனா