காக்கை கூட்டம்
மனிதர் கூட்டம் பறித்து
தின்னுது
நாலு கால் மிருகங்கள்
சேர்ந்து
போகுது
இரண்டு கால் மனிதர்கள்
அடிபட்டு
பிரிந்து போகுது
ஆண்டவன் படைப்பில்
வேறுபாடு
கண்ணுக்கு நல்லாய்
தெரியுது
ஜந்தறிவு மிருகங்கள்
அன்போடு
வாழுது
ஏன் ஆறறிவு படைத்த மனிதர்கள்
மட்டும்
ஆளையாள் அடித்து
கடித்து
குதற
பார்குது
பறவைகள் கூட்டம் பாடி பறக்குது
இந்த மண்ணில் மனிதர்கள் மட்டும்
மண்ணுக்காக பொன்னுக்காக பெண்ணுக்கா
ஏன் அடிபட்டு மாழுது
வானத்துக்கும் பூமிக்கும் நடுவே ஒரு
அழகான
பூந்தோட்டம்
அதில் ஆயிரம் ஆயிரம் யுத்தங்கள் வந்து
பாலை வனமாய் மாறியதே!
அதில் வாழும் மனிதர்கள் மனங்களும்
கற் பாறைகளாய் போனதே!
கவி மீனா