Sonntag, 20. Juli 2014


உண்மைகள் சுடும்

தேங்காய் பால் விட்டு ஒரு வெண் பொங்கல் செய்து தேங்காய் மிளகாய் கருவேப்பிலை சின்ன வெங்காயம் உப்பு புழி சேர்த்து ஒரு சம்பலும் செய்து சாப்பிட்டால் என்ன ருசி என்ன சுவை இது நமது வெண் பொங்கல் அல்லது பால் புக்கை என்று சொல்கிறோம்.

அட இதைதான் சிங்களவரும் செய்து போட்டு கிரிபத் உம் பொல் சம்பலும் என்று சொல்லி சாப்பிடுறாங்கள் புக்கை என்று சொன்னால் சிங்களவருக்கு கோவம் வரும் காரணம் அது அவங்களுக்கு வேறு பொருள் படுது  கெட்ட வார்தை ஆகிறது.

அதை விடுங்கப்பா நாங்கள் கும்பிடுகிற பிள்ளையாரை தான் அவங்கள் கணதெய்யோ என்று கும்பிடுறாங்கள் இன்னும் ஏன் நாங்கள் கட்டுற சேலையை தான் அவங்கள் கொஞ்சம் மாற்றி கட்டுறாங்கள்.

ஒரே நாட்டிலை விழைகிற  இந்த அரிசி மரக்கறி பருப்பு  மற்றும் கடலிலே பிடிக்கிற மீன் வகை இதைதான் கொஞ்சம் வித்தியாசமாக சமைகிறாங்கள் சாப்பிடுறாங்கள்.

 

இது எல்லாதுக்கும் மேலாக வெட்டி பார்த்தால்  தமிழனுக்கும் சிங்களவனக்கும் இரத்தம் ஒரு நிறம்தான் சிவப்பு நிறம்தான் பிரம்மம் என்று எல்லா உயிர்களும் பிரமத்தின் தோற்றம் என்று தானே சொல்கிறார்கள்.

இருவருக்கும் உடலிலே குருதி சிவப்பாக ஓடுது இரண்டு பக்கத்திலும் கடல் நீல நிறமாக தானே ஓடுது? நாம் தமிழை எழுதுகிறோம் சிங்களவர் மலையாழம் போல காட்சி தரும் சிங்களத்தை எழுதுகிறார்கள்   பல சொற்கள் ஒன்றாகவே இருக்கிறது.

அன்னிய நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயருக்கு அடிமையாகி வாழ்ந்து அவனது மொழியை விழுந்து விழுந்து படித்து  தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசி வேலை செய்த தமிழன் அன்னிய மொழியை ஆங்கிலத்தை பேசும் போது பெருமை பட்டான், ஆங்கிலேயரின் யேசுவை ஏற்று கொண்டு மதம் மாறிய பல தமிழர்  இன்றும் வெளி நாடு வந்தும் மதம் மாறி கொண்டே இருக்கிற தமிழர் புத்தரை மட்டும் ஏற்க மறுத்து விட்டான், புத்தனும் யேசு போலே மனித வடிவில் வந்த தேவ தூதன் தானே?

ஐரோபா எங்கும் இன்று பரவி வாழும் தமிழன் ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளில் கஸ்டமான மொழிகளை கஸ்டப்பட்டு ஓடி ஓடி படிக்கிறான் காரணம் அன்னிய நாட்டிலே  பிர ஜா உரிமை எடுக்க வேணும் என்னும் நோக்கம் மட்டுமின்றி  அன்னிய நாட்டிலே வேலை செய்து ஒயிரோவிலே பணத்தை மூட்டை கட்ட வேணும் என்னும் குறிக்கோளுமாகும்.

வெளி நாடு வந்த தமிழனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று போராட்டமா செய்கிறாங்கள்? இல்லை கழிவு கூடம் கூட அன்னிய நாட்டிலே கழுவி தன் வயிற்றை கழுவுகிறான் பல தமிழன். படித்தவன் கூட இங்கே பரதேசி போலே கூலி வேலை செய்கிறாங்கள் ஆனால் சொந்த நாட்டிலே ஒரு சிங்கள மொழியை கற்க மாட்டோம்  என அடம் பிடித்தாங்களே, வெளி நாடுகளில் கஸ்டப்பட்டு படிக்குமா போலே  அங்கும் கொஞ்சம் முயற்ச்சி பண்ணி சிங்களத்தை கற்று இருந்தால்  இன மொழி மத வேறு பாடு தான் வந்து இருக்குமா?

இதை எல்லாம் சொல்ல நான் ஒன்றும் அரசியல் வாதி இல்லை சும்மா ஒரு அறிவாளிதான்  அறிவாளி என்று சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டாங்கள் காரணம் நம்ம தமிழனுக்கு உள்ள பொறாமை குணம்.

தப்பி தவறி தன்னும் உண்மை நாங்கள் பேச கூடாது பாருங்கோ காரணம் உண்மைகள் சுடும் என்பதுதான் உண்மை.

கவி மீனா

நம்மை நாமே

நித்தம் ஆதவன் ஒளி வீச

நிலவும் வானமும் கதை பேச

தென்றலும் மலரும் இசை பாட

குமரன் கோயில் மணி கேட்க்க

குயில்கள் கூவி துயில் எழுப்ப

துள்ளி திரிந்த நம் நாட்டை

துறந்து வந்தோம் பிற நாடு

சொந்த நாட்டில் அடிமைகளாய்

வாழ விரும்பா தமிழர் நாம்

அன்னிய தேசம் ஓடி வந்து

நான்ங்கு சுவருக்குள் வாழ்ந்து கொண்டு

இருளும் குளிரும் சூழ்ந்த  இன்நாட்டில்

நம்மை நாமே சிறை வைத்தோம்

சிறை வைத்தோம்

கவி மீனா

 

Samstag, 12. Juli 2014


தமிழே
 

தமிழே என் தாய் தந்த அமுதே

உன்னை நினைக்கும் போதும்

பேசும் போதும் மனம் இனிக்கும்

செந்தமிழின் நடை கண்டால்

தேன் சுவைக்கும் இலக்கிய ரசம்

கேட்டால் உள்ளம் உவகையில் துள்ளும்

தமிழ் மணம் சொல்லும் கவியும்

கானமாய் என் காதில் பாயும்

இயல் இசை நாடகமாய் இன்னும்

கவியும் கானமும்மாய் கதையாய்

நீ ஒரு கற்பக தருவாய் அள்ளி

அள்ளி பருக இனிக்கின்றாய்

கடலின் ஆழம் கண்டாலும்

தமிழே உன் ஆழம் காண முடியலையே

 தெவிட்டாத தீஞ்சுவையாய் என்றென்றும்

தித்திக்கும் என் இனிய தாய்

மொழியே  என்றும் உனக்கே

என் வணக்கம்

என்றும் உனக்கே என் வணக்கம்

கவி மீனா

அமுதமும் நஞ்சு

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எண்டு

சொல்லி ஏன் வைத்தாங்க?

அளவுக்கு மீறி அன்பை வைத்தால் பிரிவு

நம் ஆயுளை குறைக்குமடா

கடும் விஸம் கூட உடனே கொல்லும்

காதல் விஸமோ தினமும் கொல்லும்

கர்ம வினையால் உழரும் மனிதனுக்கு

காமமே ஒரு தொல்லையடா

கண்கள் இரண்டும் நரகத்தின் வாசல்

அது காதலில் வீழ்த்துமடா

கைகள் நான்ங்கும் கூடும் போது

அது விதியின் பந்தமடா

பிறப்பவர் எல்லாம் இறப்பதற்கு என்றால்

ஏன் இந்த தொல்லயைடா?

மனித வாழ்வில் தொடரும் உறவில்

ஏன் இந்த துன்பமடா?

கவி மீனா