மனிதன் மாறி விட்டான்
ஒரு காட்டிலே வெறும்
கொட்டிலிலே
வாழ்ந்த மனிதன்
இன்று கல் வீட்டிலே வாழுகின்றான்
மாடி வீட்டிலும் வாழுகின்றான்
ஏட்டிலே எழுத
பழகி
அவன்
நாட்டிலே வாழும்
போதும்
ஒரு நோட்டிலே தன்
உயிரை
வைத்தான்
அந்த பண நோட்டிலே
தன்
உயிரை
வைத்தான்
அவன் நோட்டிலே உயிரை
வைத்தான்
ஆட்டிலே விருந்தும்
வைத்தே
களி ஆட்டத்திலே நிலையை மறந்தே
சேற்றிலே விழுந்தும்
எழும்பி
றோட்டிலே அலைந்தும்
திரிந்தும்
தன் பாட்டிலே வாழும் சில மனிதன்
தன் வாழ்விலே விதியை
மறந்தான்
தான் வந்த பாதையை
கொஞ்சம்
மறந்தான்
பாதையை கொஞ்சம் மறந்தான்
அவன் காட்டிலே இருந்த
பண்பை
மரத்திலே தத்தி
தாவும்
பண்பை
மாற்றவே மறந்து
போனான்
நாடு விட்டு நாடுகள்
தாவியும்
அவன் தன் நின்மதியை
தொலைத்தே
விட்டான்
வாழ்வில் நின்மதியை
தொலைத்தே
விட்டான்
கவி மீனா