Donnerstag, 22. November 2012


தாய் பாசம்

கரு சுமந்த போது  வயிற்றை தொட்டு

பார்த்து மகிழ்ந்த பாசம்

பால் சுரக்கும் போது அவன் தலை கோதி

முத்தமிட்ட நேசம்

அவன் மடியில் தவழ்ந்த போது உச்சி

முகர்ந்து அள்ளி அணைத்த சுகம்

அவன் துள்ளி ஓடிய போது பார்த்து

பார்த்து ரசித்த கண்ணும்

பள்ளி சென்ற போது கை பிடித்து

மழலை  பேசி நடந்த உறவும்

அவன் கல்லுரி சென்ற போது அவன்

அழகை பார்த்து ரசித்த மனம்

அவன் திறமை கொண்டு பதவி பெற்ற

போது பெருமை கொண்ட தாய்

அவன் தோழியோடு கை பிடித்து நடந்த போதும்

கண்டு மகிழ்ந்த உள்ளம்

அவன் பேரும் புகழும் அழகும் அறிவும்

கண்டு உச்சி குழிந்த போதும்

அவன் தூர சென்ற போது மட்டும்

கலங்கி நிக்குதே மனம் தினம்

கவி மீனா

 

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen