Montag, 19. August 2019


அன்பே சிவமாய்
கூட்டம் கூட்டமாய் பறவைகள் சுத்தி சுத்தி பறக்குது
தீட்டு திட்டாய் கரு மேகங்கள் திடர்களாய் சேருது
சில்லென்று காற்று வந்து மேனி சிலிர்க வைத்து செல்லுது
சொட்டு சொட்டாய் மழை துளிகள் பூமிக்கு வருகுது
மொட்டு  மலர்கள் எல்லாம் மொட்டவிழ்ந்து  விரியுது
கட்டு கட்டாய் கவிதை வந்து காற்றோடு கரையுது

காய்ந்து போன பூமி இன்று கழிப்பில்  மலரது
மழையும்  பூமி மேலே அன்பாக  பொழியுது
அன்புக்காக ஏங்கும் இதயங்களும் உலகில் வாழுது
அன்பு காட்ட உறவு இருந்தால் இதயங்களும் குளிருது
ஏங்க வைத்து மனிதர்களை கடவுளும் ஏன் படைத்தான்?
அன்பு இல்லா உலகினையே ஏன் வளர்த்தான்?

மனித உறவினிலே  காதல் இன்பம் கூடாமல்
தாய் பிள்ளை உறவினிலே பாசங்களும் இல்லாமல்
வறண்டு போன வாழ்வாக பல மானிடர் தன் வாழ்வு
எட்டு திக்கும் முட்டி மோதி பூமி தாய் அழுகுது
மானிடரின் கண்ணீர்  கலந்தே ஆறுகளும் பாயுது
அன்பே சிவமாய் என்று அவணி மாறுமோ?
அன்றே மானி னிலத்தில் விடிவு தோணுமே!
கவி மீனா

தாலியும் வேலியும் 

தாலி என்பது தமிழ் பெண்ணுக்கு ஒரு வேலி போலே பாது காப்பு தரும் என்பதுதான் அன்றைய நம்பிக்கை!
தாலி கட்டாமல் ஒரு ஆணும் பெண்ணும் தனித்து சந்திக்க முடியாத ஒரு  காலம் ஊரிலை இருந்து.

அந்த வழக்கத்துக்கு அடிமையான பெண்கள் தாலி கழுத்தில் ஏறுவதை ஒரு பெரும் பேறாகதான் கருதினார்கள்
பெண்ணை பெற்றவர்களும் தன் மகளின் கழுத்தில் தாலி  ஏறும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் வாழுகிறார்கள்
தாலி கட்டி முடிந்தால்தான் பெண்ணின் கடமையை சரி வர செய்து விட்டதாக திருப்த்தி அடைந்த காலம் இருந்தது.

இன்று புலம் பெயர்வாழ்விலும், ஊரிலும் எப்படியோ எனக்கு தெரியலை ஓருக்காவா தாலி கழுத்திலை ஏறுது? ஒன்றை கழட்டி மறு தாலி மாறி மாறி ஏறுகின்ற காலமாகி போய்விட்டது அதை பற்றி நான் இன்று சொல்ல வரவில்லை .
அன்று தாலி கட்டும் போது மணப்பெண்ணுக்கு மெய் சிலிர்பதும் பெற்றவர் கண்களில் நீர் கசிவதும்
எல்லாம் ஒரு பெரிய காரியம் ஒப்பேறிய மன திருப்த்திதானே?
அந்த தாலி கழுத்தில் வந்த பின்னே அந்த பெண்ணுக்கு ஒரு அழகும், முகத்தில் ஒரு பொலிவும்,  நடையில் ஒரு பொறுப்பும் வந்ததும் என்னமோ உண்மைதான்.
தாலியை தொட்டு பார்க்கும் போது ஒரு மகிழ்வும்,  கண்ணாடியில் கழுத்தை பார்கும் போதும் ஒரு பரவசமும் வந்தது ஒரு பவுண் நகைகாக அல்ல அது அந்த தாலி கொடுத்த மதிப்புதான்.
தாலியை தொடும் போதெல்லாம் அதை கட்டிய கணவன் மேல் அன்பு பொங்கும் எல்லாம் காதலின் சின்னமாகதான் அன்று தாலியை கட்டுகிறார்கள்.

அந்த தாலியை காணும் போது மற்ற ஆடவர்களும் அந்த பெண்ணுக்கு மதிப்பை கொடுத்து விலகி நிற்பது வழக்கமாகி விட்டிருந்தது எல்லாம் அன்றைய காலம்,
அந்த தாலியை ஒரு பெண் மதிக்க காரணமான அந்த தாலியை கட்டிய கணவன் அந்த பெண்ணுக்கு உண்மையானவனாக, அன்பானவனாக, ஆதரவு கரம் கொடுத்து தன் உயிராக நினைத்து வாழந்தால்தான் அந்த தாலிக்கும் பெருமை அந்த தாலியை கழுத்தில்  போடுகின்ற பெண்ணுக்கும் பெருமை.

ஒரு தாலியை சுமந்து கொண்டு மனதிலை கணவனின் மேல் அன்பு இல்லாமல் இருந்தால், அந்த தாலிக்கு என்ன மதிப்பு? தாலியை கட்டிய கணவன் வேறு பெண்களோடு தன் பொழுதை போக்கிட்டு இருந்தால் அவன் கட்டிய தாலியை போடுவதால் பெருமையும் இல்லை, கட்டியவனின் ஆதரவும் அன்பும் கிடைக்காத போதும் அந்த தாலியை கழுத்தில் போட்டு ஊருக்கு எத்தனை பவுணிலை தாலி போட்டிருக்கிறோம் என்று சொல்வதுதான் இன்றை காலத்தில் அனேக பெண்கள் மத்தியில் உள்ள  வழக்மாகி விட்டது.

தாலியின் பெருமையும், தாலி கட்டியவன்மேல் உள்ள பாசமும் அந்த தாலியை கட்டிய கணவன் மனைவியை நேசிக்கும் வாழ்க்கை முறையோடே கலந்து பின்னி பிணைந்து இருக்கின்றது.

ஆரம்பத்தில் தாலி கட்டிய கணவன் போடுகின்ற தடைகள், சட்டங்கள் எல்லாம் பிடிக்குற மாதிரி இருக்கும், கால போக்கில் அவனது அதிகாரம் ஒரு பெண்ணை அடிமை நிலைக்கு தள்ளுமாகில் அந்த தாலியே கழுத்தை மெல்ல மெல்ல இறுக்கும் தூக்கு கயிறாகதான் மாறுகின்றது.

தாலிக்கும் வேலிக்கும் பெருமை பாதுகாப்பை தருவதே ஒளிய அடிமைகளை சிறையில் அடைபது போலே அடைத்து வைக்க அல்ல, ஆசையோடு கழுத்தில் போடும் தாலி ஒரு அழகு சாதன பொருள் என்று நினைக்கும் பெண்களும் உண்டு, தாலி என்பது ஒரு  பெண்ணுக்கு பாது காப்பும், பெருமையையும் கொடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணை பெற்றவர்களும் அன்று விரும்பியதும் தமிழ் பெண்கள் வேண்டுவதும் அதுவே!

அந்த தாலிக்கு மதிப்பை தருவதும், அதை அணியும் பெண்ணுக்கு பாதுகாப்பும் பெருமையும் கிடைக்க கூடியதாக வாழ்ந்து காட்ட வேண்டியது பெண்ணல்ல, அதை  அந்த பெண்ணின் கழுத்தில் கட்டிய ஆண்மகனும் என்பதே தான் நான் இன்று இங்கு சொல்ல வந்த விடயமாகும்.
ஏதோ ஒரு அழகான பெண்ணை பிடித்து தாலியை கட்டி விட்டால் அவள் விட்டு போட்டு ஓடி போக மாட்டாள் தன் காலடியில் அடிமையாக கிடந்து, வீட்டு வேலைகளை செய்து, பிள்ளைகளை பெத்துக் கொண்டு சொன்னதை கேட்டு வாயை மூடி மொளனியாக கிடக்கட்டும்  என்று நினைக்கும் ஆண்களும்,
தாலி கட்டியாச்சு எனி என்ன செய்ய போகினம்? பெண் ஒரு அடிமை என நினைத்து தன் பாட்டிலை திரிகிற ஆண்மகனாலுமே அந்த தாலி கழுத்தை விட்டு இறங்குகிற காரியம் பெண்களால் நடக்கின்றது.

இல்லையேல் கட்டியவன் மரணத்துக்கு பிறகுதான் இறங்குகிற தாலிஆண்களின் திமிரான போக்காலும், புரிந்துணர்வில்லாத குடும்ப வாழ்க்கையாலும்,
 ஒற்றுமையான வாழ்வும் இல்லாமல் போவதால் மரணங்கள் காணும் முன்பே மணமுறிவு வருகிறது, தாலிக்கும் மதிப்பு இல்லை அது தந்த மணவாழ்வுக்கும் பெருமை இல்லை!
மரணத்தின் முன்பே தாலி கழுத்தை விட்டு இறங்கும் காலம் மணவாழ்வுக்கு மரணம்.
மணவாழ்வுக்கே மரணம்!

கவி மீனா



Up and Down 
குடிக்க ஒரு 7 up
தொலை பேசியில்
கதைக்க ஒரு Whats app
முகத்துக்கு தேவை Make up
சிலருக்கு இருக்குது Set up
வாழ்கையில் இருக்கு Up and Down
இறந்தால் போவது Up or Down யாருக்கு
தெரியும்?

தேனீருக்கு தேவை Tea Cup
பல்லுக்கு முக்கியம் Brush up
தேவையில்லை சும்மா Build up
காலையில் எல்லாரும் Get up
மரத்துக்கு வேணும் Grown up
பிடித்தவர் என்றால் Pick up
பிடிக்காது போனால் Push up


காதலில் வரும் Breake up
40 க்கு மேலே தேவை Check up
சிலரது முகத்தை Close up
இல் பார்க முடியாது
இதுக்கு மேலே என்ன சொல்ல?
 So you shut up me too shut up
 கவி மீனா

மனைவிக்கு

1.துணைவி 2. கடகி 3. கண்ணாட்டி 4. கற்பாள் 5. காந்த 6. வீட்டுக்கா 
7. கிருகம் 8. கிழத்தி 9 குடும்பினி 10. பெருமாட்டி 11. பாரியாள் 
12. பொருளாள்
13. இல்லத்தரசி 14. மனையுறுமகள் 15. வதுகை 16. வாழ்க்கை 17. வேட்டாள்
18. விருந்தனை 19. உவ்வி 20. சானி 21. சீமாட்டி 22. சூரியை 23. சையோகை
24. தம்பிராட்டி 25. தம்மேய் 
26. தலைமகள் 27. தாட்டி 28. தாரம் 29. மனைவி
30. நாச்சி 31. பரவை 32. பெண்டு 33. இல்லாள் 34. மணவாளி 35. மணவாட்டி
36. பத்தினி 37. கோமகள் 38. தலைவி 39. அன்பி 50. இயமானி
51. தலைமகள் 52. ஆட்டி 53. அகமுடையாள் 54. ஆம்படையாள் 55. நாயகி 56. பெண்டாட்டி
57. மணவாட்டி 58. ஊழ்த்துணை 59. மனைத்தக்காள் 60. வதூ
61. விருத்தனை 62. இல் 63. காந்தை 64. பாரியை 65. மகடூஉ 66. மனைக்கிழத்தி
67. குலி 68. வல்லபி 69. வனிதை 70. வீட்டாள் 71. ஆயந்தி 72. ஊடை

ஒரு மனைவிக்கு அதாவது இல்லத்தரசிக்கு இத்தனை பேரு உண்டாம் காரணம் என்ன தெரியுமா?
எல்லாமாகி நிற்பவள் மனைவி அதனாலேதான் இத்தனை பேரு அவளுக்கு!
இதை புரியாத ஆணுக்கு ஒரே ஒரு பேரு முட்டாள் என்று!

அவளே வீட்டில் அரசி, அனைத்தையும் கட்டி காப்பவள், அவளின்றி அணுவும் அசையாது, அவளில்லாது போனால் ஆணுக்கு ஆதோ கதிதான்!
 தெரு நாய்கும் துணையில்லா ஆணுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை!
தெருநாய் கண்ட இடத்தில் காலை தூக்குது மனைவியை இழந்த ஆண் கண்ட இடமெல்லாம்  கையை நனைக்குது!

கூட இருபது சக்தி என அறியாத கணவனுக்கு மனைவி கைவிட்டு போன பின் தேகத்திலும் சக்தி இருபதில்லை
எது உண்மையான பெருமை என்பதை அவனாக உணர வேணும்
மேடைகளில்  இடிமுழக்கமாக பேசினாலும்   பக்கத்திலே மனைவி இல்லாவிடில் கூட்டத்திலே அவனுக்கு மதிப்பு இல்லை!

தான் ஒரு நல்ல குடும்பஸ்தனாக வாழ்ந்து காட்டினால்தான் மேடையில்
ஏறி அடுத்தவனை வாழ்த  ஒருவனுக்கு தகுதி உண்டு,
தன் குடும்பத்தை பார்காதவனுக்கு பேரு தறுதலை!  மானம் மரியாதை எல்லாம் ஒரு நல்ல குடும்பஸ்த னுக்கு மட்டுமே போய் சேரும்.
தாய்கு நல்ல மகனாய், மனைவிக்கு நல்ல புருஸனாய், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் வாழ்ந்து காடுபவனே ஒரு நல்ல மனிதன்,
இது ஒரு மனிதனாக பிறந்தவனுக்கு உள்ள கடமை, கடைமையை செய்ய தவறியவன் ஒரு மனிதனாக மதிக்க படமாட்டான்.
மனிதனாக பிறந்து தன் கடமைகளை செய்ய தவறுபவனுக்கு கடவு ளே தண்டனைகளை கொடுக்கின்றார்,  கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து சோரம் போரவனுக்கு  சொரி சிரங்கு முதல் சகல ரோகங்களும் கடைசியில் வரதான் செய்யும்.
அவனது மனசாட்சியே அவனை ஒரு நாள் கொல்ல தொடங்கும்  சாகும் வரை மரண தண்டனை நித்தம் கொடுக்கும்.

சாப்பிடும் போது இனிக்கிற இனிப்பு காலம் செல்ல சல ரோகத்தை கூட்டுவது போலே, உடனே இனிக்கிற சல்லாபமும், கள்ள காதல் கழியாட்டங்களும்,  மேடை கொளரவமும் எத்தனை நாளைக்குதான் இனிக்க போகிறது?
கடைசியிலே தவித்த வாய்கு தண்ணி கொடுக்க யாருமே வர போவதில்லை!

மனைவி கையால் கிடைத்தால் அது சுடு சோறு அடுத்தவன் இரக்கபட்டு கொடுத்தால் அது பழம் சோறு!
பதவியும் இளமையும் இருக்கும் வரைதான் சனம் கூடும் முதுமையும் நோயும் பிணியும் சேரும் போது,
செத்த நாயிலை உண்ணி களருவது போலே ஒட்டி நின்ற சனம் ஒன்றொன்றாய் களன்று போகையில்  மமதை கொண்டு அலைந்தவனுக்கும் சுடலை ஞானம் வரத்தான் செய்யும்.

நல்லதொரு மனைவியின்  அன்பை இழந்து அவளது சொத்துக்கும், பொருளுக்கும் ஆசைபட்டு அவளை நசுக்கி வாழ்ந்த மனிதனுக்கு கடைசியிலே கடவுளின் தண்டனையில் நசுக்கபடும் போது விழங்கும் மனைவியை ஏமாற்றியதற்கும், செய்த துரோகங்களுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் என்பது.

காலம்கடந்து மீண்டும் திரும்பி பார்தால் பூட்டிய கதவு திறக்காது உடைந்த இதயம் மீண்டும் பொருந்தாது!
அடுத்தவனுக்கு தான் விழுந்தும் மீசையிலே மண் ஒட்டாத போலே நடித்து சிரித்து உள்ளுக்குள்ளே புழுங்கி அழுது
தேசமெல்லாம் ஓயாது தனி நடையாய் ஓடிய கால்கள் எனி சுடுகாடு நோக்கி பொடி நடையாய் போவதுதான் நியதி! இதுதான் அவன் தேடிய தலை விதி!
கவி மீனா