நீரிழிவு
நோயளிகளுக்கு ஒரு ரிப்ஸ்
நீரிழிவு
நோயாளிகளுக்கு எமது உணவுகளே மருந்தாகவும்
நோயை குறைக்கும் தன்மைகள் உள்ளதாகவும் உள்ளது என்பதை நமது
நாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள், அதாவது
எமது காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மூலமே எமது நோய்களை
மாற்ற முடியாது போனாலும் ஒரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மைதான்.
பொதுவாக
எல்லாருக்கும் தெரியும் பாவற்காய் நீரிழிவு நோயை குறைக்க வல்ல
மரக்கறியாகும், அதே போலே வெண்டிக்காயயும்
இரத்தத்தில் உள்ள குளோக்கோஸின் அளவை
குறைக்க வல்லது இன்சுலின் பெருக்கி
ஆக உள்ளது என்கிறார்கள்.
வெண்டிக்காயை
அடியிலும் நுனியிலும் வெட்டிப்போட்டு தண்ணிக்குள் ஊற வைத்து அந்த
நீரை குடிக்க இரத்தத்திலுள்ள
குளோக்கோஸின் அளவு குறையும் என்பது மருத்துவம், அதை நாட்டு
மருத்துவர்கள் கூறி விட்டார்கள் ஆனால்
நான் சொல்ல விரும்புவது என்னவெனில்
வெட்டி
எறிகிற அந்த அடியும் நுணியும்
துண்டுகளே போதும் ஒரு கப்
தண்ணியில் ஊற வைக்க, அடுத்த
நாள் காலை அந்த நீரில்
நிறைய விழு விழுப்பு வந்திருக்கும்
அதை குடித்து வரலாம் வீணாக முழு
வெண்டிக்காயை ஊற வைத்து பின்
தூக்கி எறியாமல் இப்படி செய்து பாருங்கள்.
மேலும்
வல்லாரை, முருங்கை இலை, வெந்தயம், கருவா, கருவேப்பிலை
போன்ற எமது நாட்டில் கிடைக்கும்
இயற்கை காய்கறி களும் மூலிகைகளுமே
நீரிழிவு நோயாளிகளுக்கு அன்றாடம் உணவில் சேர்க வேண்டிய
பொருட்களாகும்.
இந்த நடை முறையும், நடை
பழக்கமுமே நீரிழிவு நோயாளிகளை நலமாக வாழ வைக்கும்
என்பதில் ஐயம் இல்லை.
அதற்க்கு
மேலாக மன அமைதியும் மகிழ்சியான
வாழ்வும் தரும் ஆறுதல்தான் நோயாளிகளுக்கு
அரு மருந்தாகும்.
கவி மீனா