Samstag, 5. Juli 2014


இன்பமும் துன்பமும்

இடியும் மழையும் கலந்து வரும்

மறுநாள் நிலவும் தொடர்ந்து வரும்

இருளும் இரவும் சேர்ந்து வரும்

பகலும் ஒளியும் பின்பு வரும்

இன்பமும் துன்பமும் மாறி வரும்

இம்மையும் மறுமையும் தேடி வரும்

இறப்பும் பிறப்பும் உலகில் வரும்

இதுவே இயற்கையின் நியதி ஆகும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen