இன்பமும் துன்பமும்
இடியும் மழையும்
கலந்து
வரும்
மறுநாள் நிலவும்
தொடர்ந்து
வரும்
இருளும் இரவும்
சேர்ந்து
வரும்
பகலும் ஒளியும் பின்பு
வரும்
இன்பமும் துன்பமும்
மாறி
வரும்
இம்மையும் மறுமையும்
தேடி
வரும்
இறப்பும் பிறப்பும்
உலகில்
வரும்
இதுவே இயற்கையின் நியதி
ஆகும்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen