Sonntag, 20. Juli 2014


நம்மை நாமே

நித்தம் ஆதவன் ஒளி வீச

நிலவும் வானமும் கதை பேச

தென்றலும் மலரும் இசை பாட

குமரன் கோயில் மணி கேட்க்க

குயில்கள் கூவி துயில் எழுப்ப

துள்ளி திரிந்த நம் நாட்டை

துறந்து வந்தோம் பிற நாடு

சொந்த நாட்டில் அடிமைகளாய்

வாழ விரும்பா தமிழர் நாம்

அன்னிய தேசம் ஓடி வந்து

நான்ங்கு சுவருக்குள் வாழ்ந்து கொண்டு

இருளும் குளிரும் சூழ்ந்த  இன்நாட்டில்

நம்மை நாமே சிறை வைத்தோம்

சிறை வைத்தோம்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen