தமிழே
உன்னை நினைக்கும் போதும்
பேசும் போதும் மனம்
இனிக்கும்
செந்தமிழின் நடை
கண்டால்
தேன் சுவைக்கும் இலக்கிய
ரசம்
கேட்டால் உள்ளம்
உவகையில்
துள்ளும்
தமிழ் மணம் சொல்லும்
கவியும்
கானமாய் என்
காதில்
பாயும்
இயல் இசை நாடகமாய்
இன்னும்
கவியும் கானமும்மாய்
கதையாய்
நீ ஒரு கற்பக
தருவாய்
அள்ளி
அள்ளி பருக இனிக்கின்றாய்
கடலின் ஆழம் கண்டாலும்
தமிழே உன் ஆழம்
காண
முடியலையே
தெவிட்டாத தீஞ்சுவையாய்
என்றென்றும்
தித்திக்கும் என்
இனிய
தாய்
மொழியே என்றும் உனக்கே
என் வணக்கம்
என்றும் உனக்கே
என்
வணக்கம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen