இல்லை
நாடு இல்லை ஒரு நதியும் இல்லை
வீடு இல்லை அதற்க்கு விதியும் இல்லை
கூடு இல்லை அதில் காத்திருந்த குஞ்சுகளும் இல்லை
காடும் இல்லை மலையும் இல்லை
காடு வரை கூட வர யாரும் இல்லை
பாடு பட்ட மனிதருக்கு பாதி சுகம் தானும் இல்லை
மாடு மனை மக்கள் என்று கூடி வாழ வழியும் இல்லை
வாழ்வும் இல்லை வளமும் இல்லை
வந்த வினை தீரவில்லை
போவதற்க்கு வழியும் இல்லை
போக இடம் தெரியவில்லை
உலக வாழ்க்கை நிரந்தமில்லை
அதை நினைத்து பார்த்தால் நின்மதியில்லை
காதல் அன்பு ன்று ஏதும் இல்லை
காம சுகம் தேடி அலையும் மாந்தருக்கு மதியும் இல்லை
இளமையிலே இது புரிவதில்லை
முதுமையிலே இவை யாவும் நிலைப்பதில்லை
இந்த காயமும்
நிலைப்பதில்லை
இந்த உலகில்
இருக்கும் வரை நின்மதியில்லை
நின்மதியில்லை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen