Montag, 17. März 2014


இல்லை

நாடு இல்லை ஒரு நதியும் இல்லை

வீடு இல்லை அதற்க்கு விதியும் இல்லை

கூடு இல்லை அதில் காத்திருந்த குஞ்சுகளும் இல்லை

காடும் இல்லை மலையும் இல்லை

காடு வரை கூட வர யாரும் இல்லை

பாடு பட்ட மனிதருக்கு பாதி சுகம் தானும் இல்லை

மாடு மனை  மக்கள் என்று கூடி வாழ வழியும் இல்லை

வாழ்வும் இல்லை வளமும் இல்லை

வந்த வினை தீரவில்லை

போவதற்க்கு வழியும் இல்லை

போக இடம் தெரியவில்லை

உலக வாழ்க்கை நிரந்தமில்லை

அதை நினைத்து பார்த்தால் நின்மதியில்லை

காதல் அன்பு ன்று ஏதும் இல்லை

காம  சுகம் தேடி அலையும் மாந்தருக்கு மதியும் இல்லை

இளமையிலே இது புரிவதில்லை

முதுமையிலே இவை யாவும் நிலைப்பதில்லை

இந்த காயமும் நிலைப்பதில்லை

இந்த உலகில் இருக்கும் வரை நின்மதியில்லை

நின்மதியில்லை

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen