Montag, 17. März 2014


பெண்ணின் வாழ்க்கை

பாண்டவரை மணம் முடித்த பாஞ்சாலி கதை

பாரத போரில் முடிந்தது

சிறீராமனை மாலையிட்ட சீதையின் கதை

காடலைந்து ஆசோக வனம் சென்று

தீக்குளிப்பில் போய் முடிந்தது

கோவலனின் மனைவியான கண்ணகி கதை

சிலம்பொடித்து மதுரையை எரித்து மறைந்தது

துஸ்யந்தனை காதலித்த சகுந்தலை கதை

ஏமாற்றதில் அலைந்து வனத்திலே முடிந்தது

நளமகாரா ஜாவை துணைவனாக்கிய தமயந்தி கதை

தனிமையில் கண்ணீரில் அலைய வைத்தது

அன்று தொட்டு இன்று வரை அனேக

பெண்களின் வாழ்க்கை கண்ணீர் கதையே

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாலே

எப்போதும் ஒரு பெண் நிற்க்கின்றாள்

ஆனால்  பெண்களின் கண்ணீருக்குதான்

ஆண் மகன் காரணமாக வாழுகின்றான்

இதுதான் பெண்ணின் வாழ்க்கை

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen