இதுதான்
பெண்மையா?
காதலிக்கும் போது
மனசை தொலைத்தோம்
காதலன் நெருங்கும் போது
உணர்சிகளை தொலைத்தோம்
தாலி கட்டடிய பின்னே
பெண்மையை தொலைத்தோம்
கல்யாணத்தின் பின்னே
சுதந்திரத்தை தொலைத்தோம்
பிள்ளைகள் பெற்ற பின்னே
அழகை தொலைத்தோம்
கால போக்கிலே நாம்
நின்மதியை தொலைத்தோம்
காலன் வரும் போது
நம் உடலை தொலைப்போம்
இதுதான் பெண்மையா?
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen