Sonntag, 2. März 2014


நீ நிழல் போல்

நிலவில் தெரிகிறது உன் முகம்

தழுவி செல்லும் தென்றலில் உன் ஸ்பரிசம்

பாடும் பறவைகள் ஒலியில் உன் குரல்

விழும் மழை துளியில் உன் முத்த சத்தம்

மலரும் மலர்களில் உன் வடிவம்

மல்லிகை வாசத்தில் உன் வாசம்

உதவும் கரங்களில் உன் பாசம்

என்னை சற்றி எங்கும் காண்கிறேன்

உன் அசைவை

நீ நிழல் போல் என்னை தொடருகிறாய்

என்னை இரு கரம் நீட்டி அணைக்கின்றாய்

அம்பிகையே ன் அன்பில் நான் நனைகின்றேன்

தனிமையிலும் உன்னருளாலே நான் நிறைவுடனே

வாழுகிறேன்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen