Freitag, 28. Dezember 2012


அலையும் விதி

மனதின் மூலையில் ஒரு வலி

ஏன் என்று புரியாமல் தினம்

ஒரு கண்ணீர் துளி

இதயம் தேடுது ஒரு தேடல்

அது என்ன என்று தெரியாமல்

அலையும் விதி

தொலைந் போன மனசும்

குளத்தில் விழுந்த கல்லும்

குட்டையை குளப்பி விடுகுதே

சிதறி ஓடும் மேகம் போல்

சிந்தனைகள் ஓடுதே

மழை விட்டும் தூவானம்

மறையாமல் சொட்டுதே

கூடு விட்டு கூடு பாயும்

வித்தை கூட தெரியாமல்

உடைந்து போன கூட்டிலே

ஆவி நின்று துடிக்குதே

ஆவி நின்று துடிக்குதே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen