அலையும் விதி
ஏன் என்று புரியாமல் தினம்
ஒரு கண்ணீர் துளி
இதயம் தேடுது ஒரு தேடல்
அது என்ன என்று தெரியாமல்
அலையும் விதி
தொலைந் போன மனசும்
குளத்தில் விழுந்த கல்லும்
குட்டையை குளப்பி விடுகுதே
சிதறி ஓடும் மேகம் போல்
சிந்தனைகள் ஓடுதே
மழை விட்டும் தூவானம்
மறையாமல் சொட்டுதே
கூடு விட்டு கூடு பாயும்
வித்தை கூட தெரியாமல்
உடைந்து போன கூட்டிலே
ஆவி நின்று துடிக்குதே
ஆவி நின்று துடிக்குதே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen