Mittwoch, 2. Januar 2013


வாடிய மலர்

வாடிய மலரில் வாசம் இல்லை

காய்ந்த செடியில் கனிகள் இல்லை

கறந்த பாலும் முலை புகுவதில்லை

பிரிந்த உறவில் இன்பம் இல்லை

பேசிய வார்தைகள் நமக்கு சொந்தம் இல்லை

போன இளமை திரும்புவதில்லை

நரைத்த முடியோ மீண்டும் கறுப்பதில்லை

நாம் கண்ட கனவுகள் பலிப்பதில்லை

கடவுளும் கண்ணுக்கு தெரிவதில்லை

காற்றையும் பார்க்க முடிவதில்லை

கடல் நீரும் குடிக்க இயல்வதில்லை

ஓடிய காலங்கள் மீண்டும் வருதில்லை

நாம் இழந்தவை திரும்ப  கிடைப்பதில்லை

மறைந்த உயிர்கள் வருவதில்லை

மனதில் விழுந்த துயரம் மறைவதில்லை

என்றும் மறைவதில்லை

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen