Freitag, 28. Dezember 2012


இறைவனது பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை

என்பது பழமொழி எந்த அனியாயமும் ஒரு நாளும் தண்டிக்கபடாமல் போவதில்லை

சில தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றுப் படுகின்றன சில தண்டனைகள் காலம் கடந்தாலும் வட்டியும் முதலுமாக தீர்கபடுகின்றன அரசன்  அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

பாவங்களை செய்தவர்கள் யாருமே நின்மதியாக வாழ்ந்திட முடியாது நாம் செய்த பாவங்களை நாமே சுமந்தாகணும் எமக்காக எவரும் சுமக்க முடியாது செய்த பாவத்துக்கான தண்டனைகளை நாம் இப்பிறப்பிலேயே அனுபவிக்க நேரிடும்

அது தவறி போனாலும் மறுபிறப்பிலே அதற்கான பிறவி எடுத்து அந்த தண்டனைகளை அனுபவிக்காமல் போக முடியாது என்பதே நமது இந்து தர்ம கோட்பாடாகும் இதைதான் கர்மா அல்லது கர்ம வினை என்று சொல்கிறோம்

சில பேர் சொல்லி அழுவார்கள் நாம் யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே ஏன் எமக்கு மட்டும் இப்படி எல்லாம் துன்பங்கள் வருகிறது என்று அவர்களுக்கு தெரியாது முற்பிறப்பில் அவர்கள் செய்த பாவங்கள்தான் இப்பிறப்பிலும் தொடர்கிறது என்று எப் பிறப்பிலும் நாம் பாவ செயல்களை செய்யாது  வாழ்வோமாகில் தண்டனைகள் நமக்கு இல்லவே இல்லை

தவறான வழியிலே அடுத்தவர் மனசை நோகடித்து தேடுகின்ற பணமும் பதவியும் வாழ்கையும் கூட நீண்ட நாள் நிலைகாது கள்ள வழிகளிலே பணத்தை சம்பாதிப்பவர்கள் நினைக்கலாம் எமக்கு பணம் சேருகிறது என்று ஆனால் பணத்தோடு அவர்கள் செய்கின்ற பாவ மூட்டைகளும் அவர்களுக்கு கூடிகொண்டே போகிறது அத்தோடு மன நின்மதியும் அழிந்து கொண்டேதான் போகிறது

எப்போ நமது குட்டு வெளி படுமோ? எப்போது நாம் அவமான பட நேரிடுமோ? இல்லை எப்போது நாம் பிடிபட்டு ஜெ யிலில் தண்டனை அனுபவிக்க போறோமோ என்று ஒவ்வொரு நிமிடமும் தப்பு செய்பவர் மனசு அவர்களை கேட்டு கேட்டு நின்மதியின்றி அலையதான் வைக்கும்

நாம் தேடிய பணம் ஒரு நாள் களவு போகும் ஆனால் நாம் தேடிய பாவ மூட்டைகள் ஒரு நாளும் களவு போகாது அந்த பாவங்களின் பலனை நாம் அனுபவிக்கும் போதுதான் வாய் சொல்லாது போனாலும் மனசு உண்மையை உணர வைக்கும்

அன்பு காட்ட தெரிந்த மனிதர்களும் ஆசையை துறந்த ஞானிகளும் அடுத்தவருக்கு துன்பம் செய்யாது இயன்ற உதவி செய்து வாழ்பரும் பாவங்களை சேர்பதில்லை கவலைகளை அறிவதில்லை

சில மனிதர்கள் பிறக்கும் போதே கர்ம வினையின் பலனாக தீய குணங்களோடேயே பிறக்கிறார்கள் அல்லது அப்படி வழர்கப் படுகிறார்கள் போராசை பொறாமை கோபம் பழிவாங்கும் குணம் காமம் என படும் பல வித தீய குணங்களால் ஆட்டிவைக்கபட்டு அடுத்தவர்களை நோகடிச்சு வாழ்பவர்கள் சிறிது காலம்தான் தாம் வென்று விட்டதாக பெருமை கொள்ளலாம்

நாம் சுவரை நோக்கி எறிந்த பந்து நம்மை நோக்கி திரும்பி வரும் என்பதை நாம் மறக்க கூடாது நமது பாவங்களுக்கு எல்லாம் இறைவனிடம் இருந்து அடி விழதான் செய்யும் ஆனால் இறைனது பிரம்படியில் சத்தம் மட்டும் கேட்பதில்லை

அடுதவருக்கு தெரியாமல் ஒவ்வொருதரது பாவ புண்ணியத்துக்கு ஏற்றா போலே அவர்கள் வாழ்கை அமைகிறது

 கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen