Freitag, 21. Dezember 2012


மானிட வாழ்வு

உலகில் தெய்வ பக்தி மறைந்தது

புவியில் உண்மை அன்பு ஒழிந்தது

எங்கும் மன அமைதி குலைந்தது

நம் தமிழ் கலாச்சாரம் அழிந்தது

நித்தம் தமிழும் அழிந்து போகுதே

நம் ஈழ கனவும்  சிதைந்தது

மனித சுதந்திரம் பறி போனது

இத்தனை அழிந்தும் கலங்கா மனிதன்

உலகம் அழியும் என்னும் கூற்றில்

கலங்குகிறான் ஏனோ?

உயிர் மேல் கொண்ட ஆசை தானோ?

எத்தனை பாடு பட்டாலும் போகும் இந்த

உயிரை தடுத்து நிறுத்த முடியாதே

விண்ணை தொட்ட வீரனும்

மண்ணை தொட்டு விட்டானே

மண்ணில் தோன்றிய வாழ்கை

மண்ணில் மடியும் வரைதானே?

அவணியும் அண்ட இருளில் மறையுமா?

இல்லை மானிட வாழ்கை நிலைக்குமா?

மானிட வாழ்கை நிலைக்குமா?

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen