Samstag, 6. April 2013


அன்பு தானே தெய்வம்

இரு மனங்கள் பேசும் போது

வரும் சுகமான மொளன ராகம்

மலரும் தென்றலும் உரசும் போது

வரும் இனிய காதல் ராகம்

முத்து சிப்பி வயிற்றில் விழுகின்ற துளிகள்

முத்தாக வருவதும் நம் சொத்தான காதல்

மழை துளிகள் மண்ணில் விழும் போது

வருவதுதானே பசுமையான காதல்

இறைவன் படைத்த படைப்பிலே

எங்கும் உண்டு காதல்

சில மனித மனங்கள் மட்டும்

இதை அறிந்து கொள்ளும் நாளும்

அன்பு என்ற ஒன்றே

அகிலம் ஆழும் தெய்வம்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen