Freitag, 19. April 2013


சித்தம் எல்லாம் எனக்கு

சில  மனிதர்கள்  ஒரு கடவுளையும் விட்டு வைபதில்லை சிவன் பிள்ளையார் முருகன் விஷ்னு பார்வதி சரஸ்வதி இலக்குமி ராமர் கிரிஸ்ணர் தொட்டு அனுமார் வைரவர் வரை அத்தோடு யேசு மரியா அல்லா என்று எந்த கடவுளையும் விட்டுவைக்காமல் வஞ்சகம் இன்றி எல்லா படங்களையும் பூ ஜை அறையிலே வைத்து விழக்கேற்றி வழிபடுகிறார்கள் இதற்க்கு பேர் பக்தி அல்ல ஒரு மன பயம்தான்

கடவுள் என்பது ஒன்றுதான் எல்லோருக்கும்  ஆனால் அதற்காக நாம் எல்லா கடவுள் படங்களையும் எல்லா ஆலயங்களையும் தேடி ஓடி ஓடி போக வேணுமா?  ஒரே ஒரு கடவுளை நினைத்து வழிபட்டால்தானே பக்தி மார்கம் என்று சொல்லலாம்?

சிந்தையிலே எமக்கு ஒரே ஒரு வடிவம்தான் தெரியவேண்டும் அதை நோக்கிதான் எமது பக்தியும் நம்பிக்கையும் இருக்க வேண்டும்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே  அப்படி மனசு சொல்ல வேணும் நம் சிந்தையும் அவ் வழியே நடக்கவேணும் ஏதோ ஒரு நம்பிக்கை ஓரே நோக்கு வேணும் நாம் தெருவில் வாகனத்தை ஓட்டும் போது நேரே பார்த்து ஓட்டினால்தான் நாம் நினைத்த இடத்தை போய் சேர முடியும் அது போலேதான் பக்தி வழி போவதற்க்கும் ஒரே குறிகோளும் ஒரே ஒரு கடவுள் சிந்தனையும் மட்டுமே தேவை

இங்குள்ள மக்கள் என்னடா என்றால் ஒரு கடவுள் உதவி செய்யாவிட்டாலும் மற்ற கடவுள் ஆவது உதவி புரிவார் என்கின்ற ஒரு எண்ணதிலே எல்லா கோயிலுக்கும் ஓடி போகிறார்கள் சைவ கோயில்களில் கொடியேற்றம் தொட்டு தேர் தீத்தம் பூங்காவனம் என்று எல்லவற்றுக்கும் போகிற சில சைவ பெருமக்கள் ஞாயிற்று கிழமைகளில் சேர்ச் க்கு போவதை தவற விடுவதில்லை அங்கும் தமிழிலே பிராத்தனை வைக்கும் கலேலோயா என்று ஒன்று கூடும் தமிழரது யேசுவின் பாதைக்கும் பிராத்தனையில் பங்குபற்றி அவர்களுடன் உணவும் உண்று இழைபாறி வருவதும் உண்டு இது எல்லாம் ஒரு பொழுது போக்கா? இல்லை பக்தியா?
கேட்டால் எல்லாம் ஒரே கடவுள் எங்கே போனால்தான் என்ன ? என்று எக்காள பேச்சு

ஓன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் இந்த பாடல் வேறே காதில் ஒலிக்கிறது

நான் வாய் மூடி மொனமாகிறேன்
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen