Sonntag, 28. April 2013


காமம் என்பது

காமன் வீசிய மலர்கணையால்

காதல் பிறந்தது கண்களிலே

வாசம் மிகுந்த மாருதமே

வந்து வீசும் மனதினிலே

தேசுலாவும் தேன் நிலாவும்

காதல் சொல்லியே கடந்து செல்லும்

கருத்தொருமித்த காதலர்கள்

மையல் கொள்ளவே சூழும் மையிருட்டும்

காமம் என்பது காதலோடு சேரும் போதே

மானிட வாழ்வின் ருவது இன்பம்

காமம் என்பது இறைவ னுக்கும் வேண்டும் என்றே

காமன் தொடுத்தான் மலர் கணை அம்பை
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen