உருளும் உலகம்
தேய்வதும் வளர்வதும் சந்திரன் ஆக
வெய்யிலும் மழையும் கால நிலையாக
சிரிபதும் அழுவதும் மானிடனாக
இன்பமும் துன்பமும் வாழ்க்கையாக
உறவும் பிரிவும் மானிட காதலாக
இறப்பும் பிறப்பும் தலைவிதியாக
பசுமையும் வறட்சியும் பூமியில் மாற
வறுமையும் செல்வமும் மானிடர் காண
ஆண்டவன் படைத்தான் உருளும் உலகம்
என்று ஒன்றை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen