காற்றே நம் சுவாசம்
கடலுக்குள்ளே காற்று புகுந்தால்
பேரலையாய் அடிக்கும்
நாதஸ்வரத்தினுள்ளே காற்று நுளைந்தால்
நாதங்களின் ஒலி கேட்கும்
புல்லாங்குழலில் காற்று புகுந்தால்
இனிய ராகம் பிறக்கும்
மலர்கள் மீது காற்று உரசினால்
சுகந்த மாருதம் வீசும்
நாசியுடே காற்று நுளைந்தால்
சுவாசத்தின் ஜீவன் ஓசை கேட்கும்
வயிற்றினுள்ளே காற்று புகுந்தால்
கட முடா ஓசைதான் கேட்கும்
காற்றின் அசைவால் எங்கும் ஓசை
எங்கும் அசைவு
இந்த காற்று உடலை விட்டு
வெளியே போனால் அடங்கி
போகும் மூச்சு
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen