Sonntag, 24. August 2014


மறுநாள் யாரிடம்

இன்று என்னிடம்

நாளை உன்னிடம்

மறுநாள் யாரிடம் தெரியாது

இறகு இல்லா போதிலும்

அது தாவி பறக்குது கைகளிலே

அது எத்தனை கிடைத்தாலும்

மனம் போதாது என்றே எண்ணிவிடும்

சேர சேர அதன்மேல் ஆசை

பேராசையாக மாறிவிடும்

வாழ்விலுள்ள கஸ்டங்களை

 அது படிபடியாக மாற்றிவடும்

பாசமுள்ள உறவுகளைகூட

 அது தனி தனியாக பிரித்துவிடும்

அது பாதாளம் வரை பாயும் என்பர்

விண்ணைக்கூட எட்டுமென்பர்

கடவுள் செய்யா வேலையெல்லாம்

இந்த அச்சடித்த வெறும்

நோட்டு செய்துவிடும்

அந்த காசேதான் கடவுள் என்பர்

காசு இருந்தால்தான் கோவில்

 கூட கட்டிடுவர்

ஏழ்மையும் துன்பமும் காசை

கண்டு அழுவதுண்டு

ஆனால் காசோ ஏழையை

பார்த்து சிரிப்பதுண்டு

இந்த காசை கண்டு

பிடித்தவன்தான் யாருடா

அந்த காசு மனிதனின் வாழ்வை

 மாற்றியதும் ஏனடா?

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen