படி தாண்டி
வருவாயா
கொடி போன்ற இடையினிலே
பூக்கூடை தாங்கி நிற்க்கும்
பொற் சிலையே பேரெழிலே
பிரம்மன் படைத்த அழகோவியமே
என் கருத்தினில் உறைந்தவளே
வானில் வட்ட நிலா வந்ததுபோல்
எதிர் வீட்டு வாசலில் நீ வந்து
எட்டி பார்க்கையிலே
என் இதயம் அலைகடல் போல் பொங்குதடி
உன் பட்டு மேனி தொட்டு தழுவி நிற்க்கும்
பட்டு சேலைபோல்
உன்னை தழுவிடவே
என் கரங்கள்
துடிக்குதடி
மொட்டவிழா மலர் போலே
பிரியாத
உன் இதழில்
என் உயிர்
நின்று தவிக்குதடி
என்னை பித்தனாய் அடிக்குதடி
உன் வட்ட
கரு விழிகள் என்னை
வாவென்று
அழைக்குதடி
வாசல்
படி தாண்டாத பத்தினியாய் நீ இருந்தும்
என்னை
உன் வசம் இழுத்தவளே
படி தாண்டி
வருவாயா? என் வாசல் வந்து
எனக்கு
வாழ்வொன்று தருவாயா?
கவி மீனா
வணக்கம்
AntwortenLöschenதங்களின் கவிதை கிடைத்துவிட்டதுநன்றாக உள்ளது
மிக்க மகிழ்ச்சி போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
இப்படி தலைப்பிடவும்
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-