ஓர் மரத்து பறவைகள்
ஓர் மரத்து பறவைகளாய் ஓர் இடத்தில் வாழ்ந்திருந்து
ஒரு மொழியை பேசி வந்த ஈழத்து தமிழ் பறவைகள்
அமைதியை தேடி கூடு விட்டு பறந்ததையா
போகும் இடம் தெரியாமல் புகலிடம் தேடியே
நாலு திசை எங்கும் பறந்து போனதையா
பல பல மரங்களில் தங்கி விட்ட காரணத்தால்
இவை பல மொழி பறவைகளாய் மாறி போனதையா
குஞ்சு பறவைகளோ சொந்த மொழி தெரியாமல்
தாய் தந்தையை புரிய முடியாமல்
தலை கீழாய் வாழுதையா இது தாங்காத சோகம் ஐயா
அன்னிய தேசத்திலே அகதிகளாய் வாழ்கையிலும்
அகம் பாவம் கொண்டதினால் ஒன்றுக் கொன்று உதவாமல்
தனி தனியே வாழுதையா தனி வழிதான் ஏகுதையா
பணம் தான் பெரிது என்று பாசத்தையே உதறி விட்டு
பாவிகளாய் வாழுதையா நேரம் இன்றி பறக்குதையா
வெளிநாட்டில் ஊறி விட்ட இந்த பறவைகட்க்கோ
சொந்த மொழி இல்லை சொந்த நாடும் இல்லை
சுற்றமும் இல்லை
சூ ழலும் இல்லை உள்ளத்திலும்
உடலிலும் சுகமுமோ இல்லை
எனி நினைத்தாலும் திரும்பாது ஊர் போக முடியாது
தொலைத்து விட்ட வாழ்வு தனை தினம் எண்ணி எண்ணி
துடிக்குதையா இரத்தக் கண்ணீர் வடிக்குதையா
மனம் இரத்தக் கண்ணீர் வடிக்குதையா
கவி மீனா
புலம் பெயர் வாழ்வின் ஏக்கத்தை
AntwortenLöschenனெதைத் தொடும் வரிகளில் தந்துள்ளீர்கள்