Samstag, 6. Juli 2013

குண்டலினி தியானமும் 7 சக்கரங்களும்


 
உலகத்திலே பல விதமாக தியான முறைகளை இன்று  கடை பிடிக்கிறார்கள் ஆனால் தியானம் முதல் முதலாக இந்து மததிலே தான் கடை பிடிக்க பட்டது காரணம் இந்து கடவுளான சிவபெருமான்தான் தியானம் தவம் இரண்டையும் தேவர்களுக்கும் சித்தர்களுக்கும் விளக்கி சொன்னார்  சித்தர்களும் முனிவர்களும் அதனை கடை பிடித்து நல்ல பலனையும் முத்தியையும் அடைந்தார்கள் அவர்களே மானிடர்களுக்கு இதனை போதித்து வந்தார்கள்

இந்தியாவில்தான் தியான முறைகள் இந்து மதத்தவர்களால் கடை பிடிக்க பட்டு வந்தது பின்னர்  புத்த மதத்தவரும் புத்தரின் போதனைகளை கேட்டு அவர்களது வழி முறையில் தியானத்தை கடை பிடித்து வந்தனர் உலகெங்கும் தியான முறை இன்று பல விதமாக பரவியுள்ளது

தியானம் தவம் யோகம் என்னும் மூன்றால்தான் நாம் இறைவனை அடைய முடியும் என்கிறது இந்து மதம்

நாம் எமது உடலை தினமும் பேணிக் காக்கின்றோம் உடற்பயிற்ச்சி செய்வதன் மூலமும் யோகா செய்வதாலும் நல்ல சத்துள்ள உணவு உண்பதாலும் தூக்கத்தினாலும்  எமது உடலுக்கு  ஓய்வும் நலமும் கிடைக்கிறது அத்துடன் ஸ்நானம்  செய்வதன் மூலம் உடலை சுத்தம் செய்கிறோம் ஆனால் எங்களது ஆன்மா  நாளுக்கு நாள் இந்த மானிட பிறப்பிலே ஏற்படும் துன்பங்களாலும் அவசரங்களாலும் ஏமாற்றங்களாலும் வேதனையுற்று நலிவுற்று போகின்றது அந்த ஆன்மாவை சுத்தம் செய்யவும் ஆறுதல் படுத்தவும் எமக்கு தியானம் பெரும் உதவி செய்கின்றது

 

எமது முள்ளந்தண்டு வடத்திலே பின்புறமாக 7 சக்கரங்கள் எமது உடலில் காண படுகின்றன அவைதான்  எமது உடலின் செயல் பாட்டை சீராக நடத்தும் சக்தியின் ஊற்றுகள் ஆகும்

அவயாவன --

மூலதாரம்

சுவாதிட்டானம்

மணி பூரகம்

அனாகதம்

விசுத்தி சக்கரம்

ஆக்கினை சக்கரம்

சகஸ்ர நாமம்   - என படும்

இதிலே மூலதாரம் என்னும் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் உள்ள சக்கரத்தில்தான் இறை சக்தி குண்டலினி என்னும் பெயரில் பாம்பு வடிவில் சுருண்டு கிடக்கின்றது இதனால்தான் இந்து மதத்தில் பாம்புகளை தெய்வமாக வழி படும் ஒரு முறை உண்டாகியது காரணம் இறை சக்தி நம் உடலிலே பாம்பு வடிவில்தான் சுருண்டு கிடக்கின்றது அதனை முறையான தியானத்தின் மூலம் ஒவ்வொரு சக்கரங்களாக மேலே எழுப்பி  சகஸ்ரநாமம் என்னும்  உச்சியிலிலுள்ள சக்கரத்தை அடைய செய்ய முடிந்தால் அவன் இறை அருளை பெற்றவனாகின்றான்

அல்லது ஆக்கினை என்னும் புருவ மத்தியில் உள்ள சக்கரம் வரை அந்த குண்டலினி சக்தியை எழுப்ப முடிந்தால் அவன் கடவுளை உணர கூ
டியவனாகவும் சகல வல்லமை உள்ள வனாகவும்  சக்தி பெறுகின்றான்

நாம் இதற்க்கு தினமும் தியான பயிற்ச்சி செய்தாக வேண்டும்  தியானத்துக்கு முதல் நாம் எமது மனதிலே  உள்ள களவு பொய்  காமம் குரோதம் கோபம் துரோகம்   போன்ற  தீய குணங்களையும் விட்டு உள்ளும் புறமும் சுத்தமாக இறைவனை நினைந்து தியானம் செய்தல் உகந்ததாகும்

தியானம் செய்ய ஒரு உகந்த சுத்தமான இடத்தை தெரிவு செய்து அங்கு யாரும் எம்மை குளபாத வண்ணம்  எமது தியானத்தை செய் தொடங்கலாம் 

தியானம் செய்யும் இடத்தில் மலர்களின் வாசம் அல்லது சந்தண குச்சி சாம்பிராணி தூபம்  இருப்பது மனதுக்கு அமைதியை தர வல்லது

அல்லது ஏகாந்தமான வனத்திலே ஒரு நீரோடையின் அருகே  நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்க கூடிய இடத்திலே தியானம் செய்வது உகந்ததாகும் அதனால்தான் அன்று முனிவர்கள் துறவிகள் கானகம் சென்று ஏகாந்ததிலே தியானம் தவம் செய்து வந்தார்கள்

தியானத்தின் போது நிலத்தில் சப்பணம் கட்டி அமர்தலே சிறந்தது பின்  கைகைளை கால் மேலே வைத்து  பெரு விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து மற்ற விரல்களை நிமிர்த்தி வைத்து கண்ணை மூடி எமது சுவாசத்தை நினைந்து  ஆரம்பத்தில் தியானம் செய்ய பழகுதல் வேண்டும் எமது மனம் எங்கு எல்லாமோ அலைபாயும் முதல் அதனை அடக்கி பழக நாம் மூச்சு காற்றை நினைந்து  சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து கூடிய நேரம் உள்ளே அடக்கி வைத்து பின் வெளி விடுகிறோம் இப்போ எமது சிந்தனை மூச்சு காற்று  உள்ளே போவதும் வருவதிலுமே மட்டும்  நிலைத்து நிற்கும்

இப்படி உள்ளே காற்றை இழுக்கும் போது ஓம் என்னும் மந்திரத்தை சொல்லி கொண்டு உள்ளிழுத்து மெதுவாக வெளி விடும் போது எமது மனதிலே உள்ள பாரங்களும் வேதனைகளும் சேர்ந்து வெளியே போவது போலே நாம் ஒரு ஆறுதலை பெறுவோம்

இப்படி ஒரு அரை மணிதியாலமோ ஒரு மணித்தியாலமோ நாம் தியானம் செய்து வரும் போது எமது மனது தூய்மை அடைகிறது  தீய சிந்தனைகளும் துயரங்களும் எம்மை விட்டு விலகி கொண்டு போகின்றன

அடுத்து நாம் மனதை அமைதி படுத்தி உடலை தளர்த்தி எமது சிந்தனையை புருவ மத்தியில் வைத்து எமக்கு பிடித்த தெய்வத்தை நினைந்து தியானம் செய்தல் அவசியமாகும்

எனி நாம்   எமது சிந்தனையை ஒருமை படுத்தி மூலதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி என்னும் இறை சக்தியை சிந்திச்ச படி அதனை ஒவ்வொரு சக்கரமாக மேலேழுப்ப முயல்வோமாக

எமது தியானத்தின் போது சிந்தளை கீழிருந்து மேல் நோக்கி ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு 5 நிமிடமாவது நிலை நிறுத்தி மேலே போக வேண்டும் மேலே போன பின் மீண்டும் கீழே இருந்து மேலே போக வேணும் இப்படி பயிற்ச்சி எமது சிந்தளைன்கு கொடுத்து தியானம் செய்து வரும் போது நாம் அந்த குண்டலினி சக்தி மேலே எழுவதை உணர கூடியதாக இருக்கும் சுருண்டு கிடக்கும் பாம்பை சீண்டினால் எப்படி அது சர் என்று மேலே எழுமோ அது போலே எமது தியானத்தின் மூலம் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் இந்த இறை சக்தியை நம் மேல் நோக்கி எழுப்ப வேணும்

அப்படி செய்ய நாம் முயற்சிக்க வேணும் இதுவே குண்டலினி தியானம் எனப்படும்

(கல் தூணை போலே மனதை அசையாது  ஒரு இடத்தில் சும்மா வைத்திருபதே தியானம்  மனமது செம்மையானால் மந்திரம் செப்பிக்க Nவேணாம் 

காணா கண்  கேளா செவி என்றிருப்போர்க்கு வானால் அடையும் வழி என் திரு மூலர் சொல்லி வைத்ததார்

நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைக்கில் இந்த மனதுக்கு அழிவில்லை வாட்டம் இல்லை என சிவவாக்கியார் சொல்லி வைத்தார்)

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen