Donnerstag, 27. Juni 2013


நின்மதி

பசும் புல்தரையிலே அழகாக மேயும் இந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகளை பாருங்க நல்லா மேய விட்டு தன்னை வெட்டி மனிதர்கள் சாப்பிட போவதது தெரியாமே இருக்கும் வரை அவை சந்தோசமாக மேய்ந்து துள்ளி திரிவதை காணும் போது சில மனிதர்கள் இங்கு எந்த நோயும் இல்லாமலே தினம் வைத்தியர் வீடுகளுக்கு மாறி மாறி அலைந்து திரிகிறார்கள் தமக்கு ஏதாவது வருதம் வந்து இறந்து போகாமல் நீண்ட காலம் உயிர் வாழ வேணும் என்ற பயம் ஒன்று பிடித்து அந்த பயத்தாலே நின்மதியிழந்து அலையும் மனிதர்கள் சிலரை நான் என் கண் கூடாக காண்கிறேன்

இந்த ஆடுகள் போலே ஏன் மனிதர்களாலே நின்மதியாக இருக்க முடியவில்லை என்று ஓரு சிந்தன ஏற்பட்டது எனக்கு  நாளை வெட்டு பட  போவது தெரியாமல் நின்மதியாக வாழும் ஆடுகள் எங்கே? நாளை நாம் இறந்திடுவேமா என்று எண்ணி பயதிலே நின்மதியை தொலைத்து விட்டு தினம் தினம் ஏங்கி ஏங்கி சாகும் மனிதர்கள் எங்கே?

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen