Sonntag, 23. Juni 2013


மோக மென்னும்

காந்தம்மென உன் இரு விழிகள் கவர்ந்திழுக்க

புன்னகை பூத்த முகம் கவி படைக்க

கமழ் முல்லை சுற்றி வரும் வண்டினைபோல்

காளை எந்தன் நெஞ்சம் பர பரக்க

மோக மென்னும் தீ என்னை சுட்டெரிக்க

தொட்டிடவே துடித்து நின்றேன் உன் இதழை

பொட்டு வைத்த உன் வதனம் சுருங்கிடுமோ என அஞ்சி

கட்டழகி உன்னழகை என் இதய கூட்டினிலே 

காவியமாய் படைத்தனடி

உன் வட்ட கரு விழிகள் என்னை நித்தம் வாட்டுதடி

கொந்தளிக்கும் உன் மூச்சு கொங்கைகளை தூக் கையிலே

காமதீ கொல்லுதடி காதல் தாகம் வந்து தாக்குதடி

பாவை உந்தன் பேரன்பில் மூழ்கி முத்தெடுக்க

ஏழு   ஜென்மம் போதாதே

உன் கையணைபில் மாண்டிடவே ஏங்கி தவிக்குதடி

என் நேஞ்சம் ஏங்கி தவிக்குதடி
வேல்

2 Kommentare: