மோக மென்னும்
காந்தம்மென
உன் இரு விழிகள் கவர்ந்திழுக்க
புன்னகை
பூத்த முகம் கவி படைக்க
கமழ் முல்லை சுற்றி வரும்
வண்டினைபோல்
காளை எந்தன் நெஞ்சம் பர
பரக்க
மோக மென்னும் தீ என்னை சுட்டெரிக்க
தொட்டிடவே
துடித்து நின்றேன் உன் இதழை
பொட்டு
வைத்த உன் வதனம் சுருங்கிடுமோ
என அஞ்சி
கட்டழகி
உன்னழகை என் இதய கூட்டினிலே
காவியமாய்
படைத்தனடி
உன் வட்ட கரு விழிகள்
என்னை நித்தம் வாட்டுதடி
கொந்தளிக்கும்
உன் மூச்சு கொங்கைகளை தூக்
கையிலே
காமதீ கொல்லுதடி காதல் தாகம் வந்து
தாக்குதடி
பாவை உந்தன் பேரன்பில் மூழ்கி
முத்தெடுக்க
ஏழு ஜென்மம்
போதாதே
உன் கையணைபில் மாண்டிடவே ஏங்கி தவிக்குதடி
என் நேஞ்சம் ஏங்கி தவிக்குதடி
வேல்
அருமையான வர்ணனைகள்
AntwortenLöschenThanks for your comments
AntwortenLöschen