தப்பு தண்டா தமிழரே
நல்ல வழி நடத்தும்
மேய்பனாய்
யேசுவும் வந்தார்
போதனை சொல்லி திருத்தவே
புத்தரும் வந்தார்
வாழும் நெறி சொல்ல
அன்று
வள்ளுவர் வந்தார்
சுதந்திரம் தேடி
தர
அன்று
காந்தி கூட வந்தார்
கவிதை பாடி புதுமை
வாங்க
பாரதியும் வந்தார்
போராடி நம் நாட்டை
காக்க
பிரபா கூட பாடு
பட்டார்
யாரு வந்தும் முடியலையே
தப்பு செய்யும் தமிழரை
திருத்த வழி
இல்லையே
தப்பு தண்டா பண்ணும்
தமிழரை திருத்த வழி
இல்லையே
வழி இல்லையே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen