முனி உலா வரும்
நாவல் மரத்தில் காளி
என்பர்
நடு நிசியில் கொள்ளி
வாய்
பிசாசு
என்பர்
புளிய மரத்தில் வைரவரும்
காட்டுக்குள்ளே
மோகினியும்
இரவு வந்தால் அன்று
ஈழத்தில் ஒரே பேய் பயம்
எந்த இருட்டை பார்த்தாலும்
பேய்
வரும்
என்று
பயம்
ஒருத்தரும் இரவில்
தெருவில்
சுற்றுவதில்லை
பாரும்
காரணம் முனியப்பர் வருவார்
என்று
சொல்லுவினம்
கேளும்
அத்தனை பேய்களும் இங்கும்
உலா
வருகுது
பாரும்
தினம் இரவு பகலாய்
அவை
உலா
வருகுது
பாரும்
இங்கே தினமும் முனியப்பர்
உலா
வருவார்
பனி காலத்திலும் முனியப்பர்
உலா
வருவார்
பறட்டை தலையும் அதிலே
செம்பட்டை
மயிரும்
கழுத்து நிறைய
தடித்த
வெள்ளி
சங்கிலியும்
காதிலே கடுக்கனும் கையிலே
நெருப்பும்
வாயிலே
புகையும்
நடந்தாலும் இருந்தாலும் கை
தொலை
பேசி
மணியும் அடிக்க கடும் இருட்டிலும் குளிரிலும்
இந்த முனி உலா
வருவார்
சுத்தி வர கொள்ளி
வாய்
பேய்களும் கொத்தி பிசாசுகளும்
சில சமயம் மோகினி
பேய்களும்
இரவிலும்
இருட்டிலும் குளிரிலும்
பனியிலும்
கும்மாளமாய் உலாவருகுது தினம் பாரும்
முனிகள் உலா
வருகுது
பாரும்
கையிலே புட்டியும் வாயிலே
சீட்டியும்
பக்கத்தில் குட்டியும்
கூட
வரும்
பாரும்
இது ஐரோப்பாவுக்கு வந்து
இறங்கிய
முனிகள்
பாரும்
பாதை மாறி போன
தமிழன்
முனிகளாய்
மாறிய கதைகள் தான்
இது
கேளும்
ஐரோப்பாவிலும் முனிகள்
வந்த
கதையை
கேளும்
கொஞ்சம் நின்று தான் கேளும்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen