Freitag, 13. Dezember 2024

 

ஆறடி நிலத்திலே

சிறகு முளைக்கும் வரை பறவைகள் கூட்டிலே

நடை பழகும் வரைதான் பிள்ளைகள் வீட்டிலே

கொடிய மிருகங்கள் வாழுது காட்டிலே

 துரோகிகள் மனித வடிவில் வாழ்வது நாட்டிலே

ஆன்றோர் எழுதி வைத்தது ஏட்டிலே

ஆண்டவன் எழுதி வைத்தது நம் தலையிலே

கருத்தை இனிமையாய் சொல்லலாம் பாட்டிலே

அதை கேட்டு ரசிக்க வேணும் காது முகததிலே

தத்துவம் பிறக்குது கவலையிலே

தள்ளாட்டம் வருவது மது போதையிலே

எதையும் செய்வார் சிலர் மமதையிலே

பின்னர் ஆடி அடங்குவார் ஆறடி நிலத்திலே

கவி மீனா

Samstag, 2. November 2024

 

வாழ்க்கை

மூச்சு மட்டும் இருந்து விட்டால்

அது வாழ்க்கை இல்லை பாருடா

வயிறு முட்ட உண்டு விட்டால் அதுவும்

வாழ்க்கை இல்லை  கேளடா

உன்னை சுற்றி ஆட்கள் இருந்தால் அதுவும்

வாழ்க்கை இல்லை நினையடா

உள்ளத்திலே அமைதி இருந்தால் சொல்லடா

மனம் நிறைந்த வாழ்க்கை அதுவே

யோசிச்சு பாரடா

கவி மீனா

Sonntag, 22. September 2024

 (மனிதன் மட்டும்)

எறும்பு ஓடி ஓடி பாடு பட்டு
ஒற்றுமையாய் வாழுது
குழவி கூட கூடு கட்ட
இடம் பார்க்குது
குருவி கூட குஞ்சுக்கு இரை
தேடி செல்லுது
கிளிகள் கூட கொஞ்சி குலவி
கதை பேசுது

சோறு போட்டால் நாய்கள் கூட
வால் ஆட்டுது
மனிதன் மட்டும் நன்றி கெட்டு திண்ட
வீட்டுக்கே இரண்டகம் பண்ணுறான்
மனிதன் மட்டும் வீடு இருந்தும்
அடுத்த வீட்டை பார்க்கிறான்
தன் வீட்டு கஞ்சலை பொறுக்காமலே
அடுத்த வீட்டு குப்பை பற்றி
கதை பேசுறான்
இவன் வாலில்லா குரங்கு என்று
தன்னை நிலை நாட்டுறான்
ஆசையிலே தாவி தாவி
திரிவதனால் இதை
இவன் நிலை நாட்டுறான்
கவி மீனா

Freitag, 16. August 2024

 

நாட்டு நடப்பு 9

மீண்டும் நாட்டு நடப்பு பற்றி எழுதுகிறேன் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ அதில் மனித்ர் குணங்களும் மனங்களும் மாறுவது போலே வாழ்க்கையும் மாறுகிறது கலாச்சாரமும் மாறுகிறது

ஊரிலை இருக்கும் வரை கிழிந்து போன ஆடைகளை போட்டால் பிச்சைகாரன் என்றுதான் சொல்வார்கள், அங்கை கிழிந்த ஆடைகளை போடுவதில்லை பிய்ந்து போனால் தைத்து அல்லது புது ஆடைகளை வாங்கி போட்டல்தான் கொளரவம் வெளிநாடு வந்த பின் கிழிந்த ஆடைகளை போட்டால்தான் நாகரீகம் ஆகி போச்சு!

இளசுகள் போடுகிற கால்சட்டை முழங்காலிலை ஓட்டை இல்லாட் டி பின்னாடி ஓட்டை இப்படி போட்டால்தான் ஸரைலு  பாருங்க!

அந்த நாளையிலை கார் மேக கூந்தல் என்பார் கரு நாகம் போலே பின்னல் என்பர் நீண்ட தலை முடி இருந்தால்தான் பெண்களுக்கு பின்னல் போடவும் பூமாலை கட்டவும் ஐடை பின்னி அலங்காரம் பண்ணவும் அழகு என்று சொல்வர் ஆனால் வயது போய் முடியை கழுவி சுத்தமாக வைக்க முடியாதவர்கள் முடியை கட்டையாக வெட்டுவது ஒரு காரணம் என்றால் இளசுகள் எல்லாம்  சைட்டு எல்லாம் வழிச்சு நடுவிலை மட்டும் மயிரை விட்டு வெட்டுவது நாகரீகமாச்சு பெண்களுக்கு பதிலாக ஆண்பிள்ளைகள் இன்று முடி வளர்து  திரிவதும் நாகரீகமாச்சு பாருங்க!

ஆடை அலங்காரம் மாறுவது மட்டுமல்ல ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த காலம் மலை ஏறி போச்சுது இன்று ஒன்று போக மற்றொன்னு பிடி என்று காலம் மாறி போச்சுது  தாங்க முடியாத  தொல்லைகளினால் குடும்பங்கள் பிரிவது உண்டு இல்லை மரணம் சம்பவித்தால் ஒருவர் தனித்து வாழ்வதும் உண்டு ஆனால் காசுக்காகவும் செக்ஸ்க்காவும்  ஆணும் பெண்ணும் பிரிந்து புதிய  துணையை தேடுவது இன்று சகஐமாகி போச்சுது!

அதையேன் கேட்பான் ஒரு  எண்பது வயது கிழவன் கூட இங்கை தனியாக இருக்க முடியாது அதுவும் பென்ஸன் பணமும்  வேறு வருமானமும்  சிற்றிஸனும் இருந்து  விட்டால் அந்த கிழவனை சுற்றியும் பெண்டுகள் வட்டமிடுகுதுகள் காரணம் அந்த ஆளை பிடித்து எழுதினாலும் அந்த ஆளு அடுத்த நாளே மண்டையை போட்டாலும் இல்லை போட வைத்தாலும் காலத்துக்கும் பென்ஸன் பணமும்   சிற்றிஸனும் எழுத்து எழுதிய பெண்ணுக்கு கிடைக்கும் என்பதுதானனுங்க!

இதற்காக பென்ஸன்  கிடைக்காத சிற்றிஸன் இல்லாத பெண்கள் கிழவனை கூட பிளான் பண்ணி பிடிக்க அலைகுதுகள் இதுவும் உண்மைதானுங்க!

 

காசேதான் கடவுளப்பா இந்த காசுக்காக எது வேணுமாகிலும் செய்ய துணிந்த மனிதாகள்தான் நம்மை சுற்றி

உண்மையான நட்பும் இல்லை உண்மையான பாசமுள்ள உறவுகளும் இல்லை அப்படியான ஒரு உலகத்திலைதான் நாம் வாழுகின்றோம்

ஊரிலை இருக்கிற காணி பூமி சொத்து சண்டையிலே சகோதரங்கள் எல்லாம் அடிபடடு பிரிந்து போகிறது, யாரையும் யாரும் நம்புவதில்லை யாராச்சும் நல்லாய் இருந்தால் மற்ற சகோதரங்களுக்கே மனசு பொறுப்பதில்லை

சின்னதிரையிலை காட்டுகிற சண்டைகளை பார்த்து சனம் திருந்துவதில்லை அதே போலே வில்லிகளும் வில்லன்களும் நம்ம சனத்துக்கிடையே பெருகி கொண்டே போகிறது

 

ஜேர்மன்காரன் நாயை வளர்கிறான் ஆனால் இங்கு வந்ததமிழரில் பலர் தெருநாய்போலே நாக்கு இழைக்க அலைகிறார்கள் அடுத்தவனுக்கு பெருமை காட்ட வீட்டை வாங்குறான் காரை வாங்குறான் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக வைக்குறான் ஆனால் வருமானம் போததாது வாங்கின வீட்டுக்கு காசு கட்டவும் இந்த ஆடம்பர வாழ்க்ககைக்கும் பணம் தேவை என்பதால் ஒரு வேலை பதிந்து செய்தால் அடுத்த வேலைகளை களவாக செய்ய நாள் பூரா ஓட்டம் நாக்கு தள்ளும் அளவுக்கு வேலை செய்ய வேணும் குளிக்க நேரமில்லை ஆற அமர உணவு உண்ண கூட நேரமில்லை தூங்கவும் நின்மதியில்லை

இது எல்லாம் தேவையா? வரவுக்கு தக்கபடிதான் வாழ்க்கையை அமைக்க வேணும்   நிலமைக்கு மேலே நினைப்பு வந்தால் நின்மதி இருக்காது என்று சும்மாவா அன்று பாடினார்கள்?

நீங்களும் சுற்றி பாருங்க நான் சொல்வது பொய் இல்லை என்பது புரியும் எப்படிதான் ஓடி ஓடி சேர்த்தாலும் கடைசியிலே காதற்ற ஊசியும் வராது காண் கடைவளிக்கே என்று பட்டினத்தார் பாடி வைத்தார் அன்று

 நாம யாருக்கும் எதுவும் சொல்ல முடியாது பாருங்க  தாம் வாழவேணும் எப்படியும் வாழ வேணும் என்று முறை கெட்டு வாழ்வோருக்கு சொன்னால் இவவுக்கு எரிச்சல் அதுதான் இப்படி சொல்லுறா என்கிற சனம்தான் உண்டு அனுபவ பட்டவன் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் முன்னோர்கள் சொன்னதையும் கேட்க மாட்டார்கள்

என்றோ ஒருநாள் எல்லாம் தானாக புரிய வரும் போதுதான் தெரியும் எது நமக்கு நிலையானது என்று!

ஊரை கூட்டி உறவுகளை கூட்டி முறையாக தாலி கட்டிய மனைவியை மதிக்காதவனுக்கு கடைசியிலை ஒரு வாய்க்கு ருசியாக கஞ்சிக்கும் வளி ல்லை நேரான வழியிலை வாழாதவனுக்கு வாழ்க்கையிலே நின்மதியில்லை இதுதாங்க உண்மை!

மேலும் சொல்கிறேன் அடுத்த முறை 

கவி மீனா

 

 

 

 

 

Samstag, 3. August 2024

நீ நான் என்று

எத்தனை துன்பங்களை கடந்து வந்தேன்

இன்று கடக்க முடியாமல் நின்று விட்டேன்

சோதனைகள்  யாவையும் தூசியை தட்டுவது போலே

தட்டி விட்டேன்

இன்று றொட்டி   தட்ட முடியாமல்  தவிக்கின்றேன்

எனக்கு என்று ஒரு தனி பேர் உண்டு

அதனால் தனிமையும்  கூட வந்தாச்சு

 

நீ நான் என்று என்ணி விட்டால் அங்கு வாழ்க்கை என்பது இல்லை

நாம் என்று சேர்ந்து பாடு பட்டால் வாழ்க்கை வளர்வது உண்மை

யாரோ எழுதினான் யாரோ மீயுசிக் போட்டான் யாரோ  பாடினான்  

இங்கு பாட்டு ஒன்று உருவாச்சு

ஒற்றுமையாய்  பாடு பட்டால் அங்கு படமும் நல்லா வெளியாச்சு

 

வந்து போன உறவுகள் எல்லாம் வாழ்கை

பாடத்தை சொல்லியாச்சு

நடந்து போன சம்பவங்கள் யாவும் படிக்கலலாய மாறியாச்சு

ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல  என் கதை வேறு பாரதமாச்சு

 

இரவு முழுதும் கொசு அடிச்சே முழித்திருப்பவரும் உண்டு

இங்கு பட்டு மெத்தை விரித்திருந்தும் நடந்ததை நினைத்து

 தூங்காதவரும் உண்டு

பாதைகள் பிரிந்து போனாலும் உறவுகள் பறந்து போனாலும்

நினைவுள் எம்மை விட்டு போவதில்லை

நடப்பதை தடுக்க முடிவதில்லை காலம்தான் பதில் சொல்லும்

என்று காததிருப்போம் காலன் வரவை பாத்திருப்போம்

கவி மீனா

Freitag, 28. Juni 2024

 

உலகம் போற போக்கை பாரு 

சினிமாக்கள் சிறிசுகளை கெடுக்குது

சின்னதிரை குடும்பங்களில்

வில்லிகளை உருவாக்குது

ஆடை குறைப்பு செய்வதாலே

சினிமா உழைக்குது

அழுது அழுது பார்பதாலே

சின்ன திரை பிழைக்குது

 

ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னது அந்த காலம்

இன்று ஒன்று போனால் மற்றொன்று பிடிபது

தான் புதிய காலம்

அச்சம் மடம் நாணம் பயிர்பு எல்லாம் என்னவாச்சு

அது என்ன என்று கேட்காமலே காணாமல் போச்சு

கற்பா  மானமா அதுவும்  இல்லமலே போச்சு

 

பெண் பிறந்தால் தொல்லை

என்று எண்ணியது ஊரிலே

சீதனம் இல்லாமல் முதுகுமர் குந்தியது நாட்டிலே

இங்கு எத்தனை பெண் பிறந்தாலும்

கல்யாணமாகுது  விரைவிலே

ஒரு முறையா இருமுறையா

மறுமணமும் நடக்குதே  புலம் பெயர் வாழ்விலே

 

அன்று பெற்றவர் பட்டது சோதனை

இன்று அவர்கள் செய்வதே பெரிய சாதனை

வீடு வாசல் நகை நட்டும் தேவையில்லை

வீடு வீடாய் பெண்தேடி செருப்பும் தேய்வதில்லை

பேஸ்புக்கும் இன்ரநெற்றும் காட்டுது

காதலுக்கு சோடி சேர வழியை

கல்யாணத்தை நடத்தி விட்டால்

பெற்றவருக்கு கடமை முடியுது பாரும்

கவி மீனா

 

 

Mittwoch, 19. Juni 2024

கூடாது கூடாது

அறிவுக்கு மேலே பேச கூடாது

அதிகமாக ஆட்டம் போட கூடாது

எல்லாம் தெரிந்தது போலே நடக்கு கூடாது


பசிக்கு மேலே உண்ண கூடாது

பகிர்ந்து உண்ணாமல் இருக்க கூடாது

வரவுக்கு மேலே செலவு கூடாது

வந்ததை எண்ணி வருந்த கூடாது

 

போனதை எண்ணி அழக்கூடாது

பொறுமை இன்றி வாழ கூடாது

அதிகம் ஆசை வைக்க கூடாது

அதுவும் களவு காமம் இருக்க கூடாது

பொய்யே பேச கூடாது

அடுத்தவருக்கு துரோகம் செய்ய கூடாது

 

அன்பு காட்ட மறக்க கூடாது

அணைத்து வாழ மறுக்க கூடாது

உதவும் கரங்களை வெறுக்க கூடாது

நன்றி மறந்து போக கூடாது

நயவஞ்சகமாய் வாழ கூடாது

நாவால் துன்பம் செய்ய கூடாது

அடுத்தவர் மனசை நோக பண்ண கூடாது

 

கவர்ச்சி காட்டி உடுக்க கூடாது

அடுத்தவன் பொருளுக்கு ஆசை கூடாது

மாற்றான் துணையை பறிக்க கூடாது

அடுத்தவன் வயிற்றில் அடிக்க கூடாது

எத்தனை இருந்தாலும் இறுமாப்பு கூடாது

எதுவும் கடைசியில் கூட வரும் எண்று எண்ண கூடாது

இறைவன் இருபதை நம்பாமல் விட  கூடாது

எங்கடை கர்மா எங்களை குருமாவாக்கும்

என்பதையும்  மறக்க கூடாது

கவி மீனா

 

 

 

Samstag, 27. April 2024

ஆண்டவன் இருப்பதை

பிறந்தாய் வளர்ந்தாய்

பெத்தாயின் மடியில் தவழ்ந்தாய்

நடை பயின்று ஓடி ஓடி திரிந்தாய்

யார் சொல்லும் கேட்காது

அடங்கா பிடாரியாய் ஆனாய்

ஆணவம் கொண்டே அலைந்தாய்

ஒரு பேதை பெண்ணை கண்டாய்

சித்தம் தடுமாறினாய்

அவளை சிக்க வைக்க

பல திட்டங்கள் தீட்டினாய்

நல்லவன் போலே நடித்தாய்

நயவஞ்சகமாய்  அவளை பிடித்தாய்

தாலி கட்டி முடிந்த பின்னே

அதிகாரம் காட்டினாய் அவளை

அடிமை போலே ஆக்கினாய்

இன்னும்  பல அடிமைகளை தேடினாய்

அவர்களுக்கும்  நீயே

கோமான் என நினைத்தாய்

 

ஆணவத்தில் ஆடினாய்

அகங்காரம் கொண்டே அவதியுற்றாய்

உன் குறை தெரியாமல் கூத்தடித்தாய்

 விட்டிலே  சட்டி முட்ட வாசமிகு கறியருந்தாலும்

அடுத்தவன் சட்டியை எட்டி பார்த்தாய்

கண்ணுக்கு அழகாக மனைவி இருந்தும்

அடுத்தவன் பெண்டாட்டிகளோடு

பொழுதை போக்கினாய்

குடித்தாயய் வெறித்தாய்

கொடுரமாக பேசினாய்

 வானத்தில் பறக்கும் காற்றாடி போலே

 குத்துக்கரணமும் அடித்தாய்

ஆண்டவன் இருப்பதை மறந்தாய்

அதனால் நுலறுந்த பட்டமாய் துலைந்தாய்

அடைகலம் புகுந்த பெண்ணை

அவணியிலே அவதியுற வைத்தாய்

இன்று வயோதிப மடமே

அடைகலமாய் கொண்டாய்

ஆண்டவன் தீர்பு இதுவே

கவி மீனா

 

 

Sonntag, 21. April 2024

 டை

வடை சுட்ட ஆச்சிக்கு வடை போச்சுது

கடை போட்ட மனிதனுக்கு கடனாய் போச்சுது

அடை சுட்ட அம்மாக்கு பல்லு போச்சுது

படையோடு மக்கள் அன்று போருக்கு போனது

இன்று பலர் வெட்டி பந்தா பேசி

வெட்டியாய் நடை போட்டு திரியுதுகள் பாரு


 

இரட்டை சடை போட்ட பெண்ணும்

இடை காட்டி சேலை கட்டுது

இல்லை தொடை காட்டி குட்டை சட்டை போடுது

கறி விருந்து படையலை கண்டு

மடை திறந்த வெள்ளம் போலே

மனசும் பொங்குது

 

இன்று டை இல்லா தலையும் இல்லை

முடை இல்லா வாழ்வும் இல்லை

விடை தெரியா பரீட்சை போலே

ஓடுது வாழ்க்iகை

அடை மழையில் அகபட்டு

குடை இன்றி அவதியுறும்  வேளை

பொடிநடை போட்டு போக முடியுமா சொல்லு

கவி மீனா