Sonntag, 21. April 2024

 டை

வடை சுட்ட ஆச்சிக்கு வடை போச்சுது

கடை போட்ட மனிதனுக்கு கடனாய் போச்சுது

அடை சுட்ட அம்மாக்கு பல்லு போச்சுது

படையோடு மக்கள் அன்று போருக்கு போனது

இன்று பலர் வெட்டி பந்தா பேசி

வெட்டியாய் நடை போட்டு திரியுதுகள் பாரு


 

இரட்டை சடை போட்ட பெண்ணும்

இடை காட்டி சேலை கட்டுது

இல்லை தொடை காட்டி குட்டை சட்டை போடுது

கறி விருந்து படையலை கண்டு

மடை திறந்த வெள்ளம் போலே

மனசும் பொங்குது

 

இன்று டை இல்லா தலையும் இல்லை

முடை இல்லா வாழ்வும் இல்லை

விடை தெரியா பரீட்சை போலே

ஓடுது வாழ்க்iகை

அடை மழையில் அகபட்டு

குடை இன்றி அவதியுறும்  வேளை

பொடிநடை போட்டு போக முடியுமா சொல்லு

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen