ஆறடி நிலத்திலே
சிறகு முளைக்கும் வரை பறவைகள் கூட்டிலே
நடை பழகும் வரைதான் பிள்ளைகள் வீட்டிலே
கொடிய மிருகங்கள் வாழுது காட்டிலே
துரோகிகள் மனித வடிவில் வாழ்வது நாட்டிலே
ஆன்றோர் எழுதி வைத்தது ஏட்டிலே
ஆண்டவன் எழுதி வைத்தது நம் தலையிலே
கருத்தை இனிமையாய் சொல்லலாம் பாட்டிலே
அதை கேட்டு ரசிக்க வேணும் காது முகததிலே
தத்துவம் பிறக்குது கவலையிலே
தள்ளாட்டம் வருவது மது போதையிலே
எதையும் செய்வார் சிலர் மமதையிலே
பின்னர் ஆடி அடங்குவார் ஆறடி நிலத்திலே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen