Sonntag, 2. Oktober 2022

 

கூடி வாழ்ந்து

சாதகத்தில் கிரகங்கள் உச்சம்என்றால்

அவன் வாழ்வை உலகம் மெச்சும் என்பர்

ஆனால் இன்று கொரோனாதான் உச்சத்திலே

விலை வாசியும்  உச்சத்திலே

யுத்தமும் பக்கத்திலே

மனித மனங்களோ அச்சத்திலே

பலர் வாழ்வோ வெறும் எச்த்திலே

 


மிச்சம் மீதி தின்பதற்க்கு இங்கு

ஏழைகள் யாருமில்லை

பணத்தின் மேலே குந்தினாலும்

மகிழ்ச்சியின்றி கடவுளிடம் பிச்சை கேட்கும்

ஏழைகள்தான் அதிகம் மடா

 

பட்சம் என்று பக்கம் வருவோர்

 பாதி வழியில் போய் விடுவர்

மிச்சமான வாழ்வும் இழுபறியாய்

போய் முடியும்

பிச்சு பிச்சு புடுங்குதற்கு

கூடவரும் உறவகளுண்டு

கூடி வாழ்ந்து கோடி இன்பம் பெற

உண்மையாக யாரும் இல்லை

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen